யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
* தெலுங்கி வேதம் படத்தை இயக்கிய கிரிஷ் தான் தமிழில் வானம் படத்தையும் இயக்கி இருக்கிறார்.
* முதல்முறையாக சிம்புவும், பரத்தும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு பெரும் நட்சத்திர கூட்டமே நடித்திருக்கி்னறர்.
* சிம்பு எழுதிய எவன்டி உன்னை பெத்தான் படாலை சிம்புவும், யுவனும் சேர்ந்து ஒன்றரை மணி நேரத்தில் மெட்டமைத்து உள்ளனர். பாடலை மும்பையில் படமாக்கியுள்ளனர். மேலும் இந்தபாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இந்தியில் இந்த பாட்டை ஆல்பமாக எடுக்கின்றனர்.
* தற்போது பிரகாஷ்ராஜ் எல்லா மொழிகளையும் சேர்த்து 22 படங்களில் நடித்து வருகிறார். வானம் படத்திற்காக 15 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி படத்தை முடித்து கொடுத்து இருக்கிறார்.
* வானம் படத்திற்காக பரத், தன்னை தேடிவந்த இரண்டு படங்களையும் ஒப்பந்தம் செய்யாமல், வானம் பட ரிலீசுக்கு பிறகு முடிவெடுக்க இருக்கிறார். இந்த படத்திற்காக நிறைய இடங்களில் அடிபட்டும், அதை பொருட்படுத்தாமல் உற்சாகமாக நடித்து கொடுத்துள்ளார்.
* படத்தில் சிம்புவுடன் ஆட முதலில் அனுஷ்கா பயந்தாராம். பிறகு சிம்பு நடன அசைவுகளை சொல்லி கொடுத்த பிறகு வெளுத்து கட்டிவிட்டாராம். இந்த படமும், பாடலும் என் கேரியரில் மறக்கவே முடியாது என்று சொல்லி வருகிறாராம்.
* படத்தில் தயாரிப்பாளர் கணேஷ் நடிக்க மறுத்தும், சிம்புவின் ஆசைக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறாராம்.
* பம்பாய், ஹைதராபாத், காரைக்குடி, போன்ற பெரும்பாலான பகுதிகளில் படம் பிடித்துள்ளனர். அதிக பகுதி சென்னையில் எடுத்துள்ளனர்.
* தமிழ் சரியாக பேச வராத இயக்குநர் கிரிஷ், வானம் படம் முடிவதற்குள் தமிழை சரளமாக கற்றுக் கொண்டு தெலுங்கில் செய்த தவறுகளை சரிசெய்து, தமிழில் வானமாக வடிவமைத்துள்ளார்.
* பாடல்கள், உடைகள், படப்பிடிப்பு தளம், மற்ற டெக்னீஷியன்கள் அனைவருமே இந்தபடத்தின் மூலம் நிச்சயம் பேசப்படுவார்களாம்.
No comments:
Post a Comment