Tuesday, May 24, 2011

அண்ணன் என்னடா தம்பி என்னடா

அண்ணன் இல்லாவிட்டால் நான் இல்லை என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார் சுள்ளான். விருது கிடைத்திருக்கும் இந்த நேரத்திலும் மேலே உள்ள டயலாக்கை அவர் ‌ரிப்பீட் செய்திருப்பது பலரை நெகிழ வைத்திருக்கிறது. ஆனா‌ல், இந்த நெகிழ்ச்சி எல்லாம் அவர்களுக்குள் இல்லை என காதை கடிக்கிறது அண்ணனின் செகண்ட் வேல்ட் யூனிட்.
இந்தப் படத்தின் நாயகியை அண்ணன் மாற்றியிருக்கிறார். இதனால் இதுவரை எடுத்த காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டும். இப்போதே ஏகப்பட்ட கால்ஷீட் வேஸ்ட். இதனால் படப்பிடிப்புக்கு அண்ணன் அழைக்க, அட போப்பா என்று கூறிவிட்டாராம் தம்பி. வளர்த்த கடா மா‌ரில் பாஞ்சுதே என்று அண்ணனும், எத்தனை காலம்தான் விசுவாசத்தை காட்டுறது என்று தம்பியும் இரு துருவங்களாக முறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment