Monday, May 2, 2011

தாராவியில் மங்காத்தா ஷூட்டிங்-அஜீத் காயம்-ஊன்று கோலுடன் நடக்கிறார்





Mankatha Shootingமும்பையில் உள்ள தாராவியில் மங்காத்தா படபிடிப்பின்போது நடிகர் அஜீத்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் ஊன்று கோலுடன் நடந்து நடித்தார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மங்காத்தா படபிடிப்பு மும்பை தாராவி பகுதியில் நடந்தது. அப்போது அஜீத்துக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இது குறித்து வெங்கட் பிரபு கூறியதாவது,
தாராவியில் வைத்து சேசிங் காட்சி ஒன்றை படமாக்கினோம். அப்போது அஜீத்துக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டு கடும் வலி ஏற்பட்டது. ஆயினும் அவர் அதை பொருட்படுத்தாமல் ஊன்றுகோல் ஊன்றி நடந்து நடித்துக் கொடுத்தார்.
அவன் ஊன்று கோலுடன் நடந்ததைப் பார்த்தவர்கள் அஜீத் மங்காத்தாவில் ஊனமுற்றவராக நடிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர் என்றனர்.

No comments:

Post a Comment