Sunday, May 8, 2011

இசைஞானி எதிர்பார்க்கும் இரண்டு

இசைஞானி இளையராஜா சமீபமாக தான், இசையமைத்துள்ள எண்ணற்ற படங்களில் இரண்டு படங்களின் வெளியீட்டை பெரிதாக எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதில் ஒரு படம் சுசீந்திரன் இயக்கியுள்ள “அழகர்சாமியின் குதிரை” மற்றொருபடம் ரத்னகுமார் இயக்கியுள்ள “செங்காத்து பூமியிலே”.
இந்த இரண்டு படங்களின் ரீ-ரெக்கார்டிங்கிலும் காட்சிகளைப் பார்த்து கண்கலங்கியதாக சொல்லும் இசைஞானி, சில மாத இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு பட இசை வெளியீட்டிலும் கலந்து கொண்டு நெஞ்சுருக பேசியது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இளையராஜா தான் இசையமைத்த படங்கள் என்றாலும் அதன் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment