Wednesday, June 8, 2011

கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்!



விவாகரத்தான புதிதில் அழுதுவடியும் முகத்துடன் காட்சி தந்த சோனியா அகர்வாலா இது! என்று ஒருவருக்கொருவர் ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டனர், நேற்றைய பட பூஜையொன்றில் அவரைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள்.
கையில்லாத, ‘லோ நெக்’ கவுனில் உடலின் அத்தனை அழகுகளும் பளிச்சிட வந்திருந்தார் சோனியா அகர்வால். முகத்தில் அநியாயத்துக்கு இளமை கூடியிருந்தது. ஹீரோயினாகவே இன்னொரு ரவுண்ட் வர அவர் ஆயத்தமாவது தெரிந்தது.
தமிழில் இப்போது இரண்டு படங்களில் புதிதாக ஒப்பந்தமாகியுள்ளார் சோனியா. இந்த இரண்டிலுமே அவர்தான நாயகி. குறிப்பாக மாதா பிதா குரு என்ற படத்தில் கதாநாயகனை விட முக்கியத்துவம் வாய்ந்த வேடம் அவருக்கு.
தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இரண்டு படங்களில் நாயகியாக நடிக்கிறார்.
திருமணமான பின் ஹீரோயினாக நடித்து ஜெயித்தவர் ரேவதிதான். அவருக்குப் பின் இப்போது சோனியா அகர்வால்தான் என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளனவாம்.
இந்த இரண்டாவது சுற்றை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் கவனமாக இருக்கிறார் சோனியா. அதன் விளைவுதான் அதிரடியாக கவர்ச்சிக்கு தாவியுள்ளாராம். பிகினி உள்பட, சென்சார் அனுமதிக்கும் அதிகபட்ச கவர்ச்சிக்கு தான் தயார் என்பதுதான் சோனியா தனது தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வரும் தகவல். அதற்கு கைமேல் பலன் கிடைத்த வண்ணம் உள்ளதாம்!

No comments:

Post a Comment