Friday, June 3, 2011

சீமான் மீது நடிகை புகார் – பின்னணியில் காங்கிரஸ்?

நாம் தமிழர் கட்சி‌‌த் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகா‌ரின் பே‌ரில் கற்பழிப்பு உள்ளிட்ட மூன்று பி‌ரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சீமானுடன் நெருக்கமாக இருந்ததாக விஜயலட்சுமி கூறும் நாட்களில் சீமான் ஈழப் போராட்டத்தில் தீவிரமாக இருந்ததாகவும், பலமுறை சிறை சென்றதாகவும் அதே போலீஸார் தொpவித்துள்ளனர். இந்த‌க் கூற்று விஜயலட்சுமியின் புகார் திட்டமிட்ட சதியோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜயலட்சுமி கமிஷன‌ரிடம் புகார் கொடுக்க வரும் செய்தி காங்கிரஸ் பிரமுகர் ஒருவ‌ரின் எஸ்எம்எஸ் தகவல் மூலமே பத்தி‌ரிகையாளர்கள் அறிந்து கொண்டனர். அந்த தகவலின் அடிப்படையில் கமிஷனர் அலுவலகம் சென்ற போது விஜயலட்சுமி புகார் தந்திருக்கவில்லை. ஒரு நடிகை புகார் தரும் விஷயம் எப்படி காங்கிரஸ் பிரமுகருக்கு முன்கூட்டியே தெ‌ரிந்தது?
காங்கிரஸை தமிழகத்தில் படுதோல்வியடைச் செய்ததில் சீமானுக்கு பெரும் பங்கு‌ண்டு. அந்த வன்மத்தின் எதிரொலிதான் இந்த‌ப் புகார் என்று நம்பவே அதிக வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment