Monday, June 13, 2011

டைரக்டர் பாலாவால் பிச்சைக்காரன் ஆன ‌தொழிலதிபர்!

ஹோட்டல், பார், பப், விஐபி கிளப் என பல தொழில்களில் சிறந்து விளங்கும் பிரபல தொழிலதிபரும் நடிகருமான ஆர்.கே.வை, பிச்சைக்காரன் ‌ரேஞ்சுக்கு வேடமிட்டு நடிக்க வைத்திருக்கிறார் டைரக்டர் பாலா.
சென்னையில் நிருபர்களை சந்தித்த நடிகர் ஆர்.கே., அவன் இவன் படத்தில் தான் ஏற்றிருக்கும் வேடம் இதுதான் என்று கூறி சில ஸ்டில்களை ‌வெளியிட்டார். வழக்கமான பாலா படத்தில் இருக்கும் அதே கோர முகம், புழுதி படர்ந்த தலைமுடி; தாடி என அக்மார்க் பிச்சைக்காரன் போன்ற தோற்றம் அது.
பாலா படத்தில் ஒரு காட்சியிலாவது நடிச்சா போதும், என்கிற கோரிக்கையுடன் பாலா அலுவலகத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் காத்துக்கிடக்கின்றனர். நான் கடவுள் படம் உருவானபோதே வாய்ப்பு கேட்டு நடையாய் நடந்தவர் ஆர்.கே.. பெரிய தொழிலதிபராக இருந்தாலும் அதற்காகவெல்லாம் நடிக்க வைப்பவரல்ல பாலா. எனவே பணபலத்தை ஒதுக்கி விட்டு ஒரு புதுமுகம் போலவே பாலாவிடம் வாய்ப்பு கேட்டார் ஆர்.கே.. அப்போது வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அவன் இவனில் வில்லன் கேரக்டர் கிடைத்திருக்கிறது ஆர்.கே.வுக்கு.
இதுபற்றி பெருமையுடன் கூறிய ஆர்.கே, நான் கடவுள் படத்தில் நடிக்க வேண்டியது. அது ரொம்ப கொடூரமான கேரக்டர்; வெயிட் பண்ணு என்று பாலா சார் சொன்னார். அவன் இவன் பட நேரத்தில் என்னை அழைத்தவர் இந்த காஸ்ட்யூம் மற்றும் தாடி கெட்டப்பை போடச் சொல்லி சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கும் ஏரியாவில் நடமாட வைத்தார். அப்படியே நான் ஓடிப் போய் விடுவேன் என்று நினைத்திருக்கலாம். ஆனால் நான் பிடிவாதமாக இருந்ததால் அப்புறம்தான் நடிக்க வைத்தார். சண்டை காட்சியில் ஒரு பள்ளம் பறித்து மெத்தையை போட்டு அதன் மேல் மணலை கொட்டி ஃபைட் செய்தோம். நான் கீழே விழும்போது மெத்தை அதிருமல்லவா? அது செயற்கையாக இருப்பதாக கருதிய பாலா மெத்தையை எடுங்க என்று கூறிவிட்டார். அப்புறம் என்ன? பெண்டு நிமிர்ந்துவிட்டது, என்றார்.

No comments:

Post a Comment