Thursday, June 16, 2011

அனுஷ்கா – நாக சைதன்யா நிச்சயதார்த்தம்… அதிர்ச்சியில் கோடம்பாக்கம்!!

நம்புவதா வேண்டாமா என குழப்பத்திலும் பரபரப்பிலும் திணறிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். காரணம்… தென்னிந்தியாவை தனது இடுப்பு மடிப்பில் சுருட்டி வைத்திருக்கும் கவர்ச்சி நாயகி அனுஷ்கா ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்ற செய்’தீ’தான்!
இவரைக் கல்யாணம் முடிக்கவிருப்பவர் அக்கட பூமியின் காதல் மன்னனான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை!!
நாக சைதன்யா, நாகார்ஜூனா மற்றும் அவரது முதல் மனைவி லட்சுமி ஆகியோருக்குப் பிறந்தவராவார். அமலா, நாகார்ஜூனாவின் 2வது மனைவி.
காதும் காதும் வைத்தமாதிரி, ஆனால் நாகார்ஜூன் – அமலா முன்னிலையில் நடந்துள்ளது இந்தத் நிச்சயதார்த்தம்.
மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த செய்தியை கோலிவுட்டின் பிரபல இளம் ஹீரோதான் டமாரம் அடித்து பறைசாற்றி வருகிறாராம். இவர் அம்மணியுடன் சமீபத்தில் ஆட்டம் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை அமலா, ரஜினியுடன் தொடர்ந்து நடித்து டாப் கியரில் போய்க் கொண்டிருந்த போதுதான், திடுதிப்பென்று நாகார்ஜூனாவை திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.
தற்போது தனது தந்தை பாணியில் முன்னணி நடிகை ஒருவரை கரம் பிடிக்கிறார் நாக சைதன்யா
திருமணத்தையாவது வெளியில் சொல்வார்களா?

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்… உடம்பை பாத்துக்கங்க! – கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினி நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார். தான் பூரண நலமடைந்துவிட்டதாக தெரிவித்த அவருக்கு, கருணாநிதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தார். மேலும் சில வழக்கமான சோதனைகள் இருப்பதால் சிங்கப்பூரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்தார்.அப்போது தமிழகம் காப்பாற்றப்பட்டமைக்காக நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
அடுத்து திமுக தலைவர் கருணாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசினார். தமது உடல் நலம் குறித்தும் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் கலைஞரிடம் தொலைபேசியில் ரஜினிகாந்த் விவரித்தார்.
உடல்நலம் தேறி ரஜினி விரைவில் சென்னை திரும்ப மனமாற வாழ்த்துவதாகவும், மீண்டும் பழைய வேகத்துடன் படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புவதாகவும் கருணாநிதி வாழ்த்தினார்.
அவருக்கு பதிலளித்த ரஜினி, “வாழ்க்கையில் நீங்கள் பார்க்காத ஏற்றத்தாழ்வுகள் இல்லை. எதைப்பற்றியும் கவலைப்படாமல், உடல் நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் முக்கியம்,” என்றார் ரஜினி.

மங்காத்தா – புதிய சர்ச்சை

வெங்கட்பிரபுவின் சரோஜா படத்துக்கும் பேபல் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்றாலும் பேபல் படத்தின் ஸ்கி‌‌ரீன்ப்ளேயின் பாதிப்பிலேயே சரோஜா திரைக்கதையை அமைத்ததாக படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்பே மீடியாவிடம் தெ‌ரிவித்தார்.அப்படிப்பட்டவ‌ரின் மங்காத்தா படம் இந்திப் படத்தின் தழுவல் என்று புதிய பூதத்தை கிளப்பிவிட்டிருக்கிறார்கள் சிலர்.
இந்தியில் இம்ரான் ஹஸ்மி நடித்த ஜான்னெட் படத்தின் கதை மேட்ச் பிக்சிங்கை மையப்படுத்தியது. மங்காத்தாவின் கதையும் மேட்ச் பிக்சிங்கை மையப்படுத்தியதே. இதன் காரணமாகவே மங்காத்தா இந்திப் படத்தின் தழுவல் என்று பேசி வருகிறார்கள் சிலர்.
ஆனால் இதனை படத்தின் தயா‌ரிப்பாளர் தயாநிதி அழகி‌ரி மறுத்துள்ளார். இரண்டு படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருப்பவர், படம் வெளிவந்தால் ரசிகர்களுக்கே இது தெ‌ரிந்துவிடும் என்று சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

Monday, June 13, 2011

ராணா – உண்மை நிலவரம்

ராணா கைவிடப்படவில்லை ஆகஸ்டில் படப்பிடிப்பு என்று கே.எ‌ஸ்.ரவிக்குமாரும், செப்டம்ப‌ரில் படப்பிடிப்பு என படத்தின் இணை தயா‌ரிப்பாளர் முரளி மனோகரும் நம்பிக்கை அளித்தாலும் உண்மை வேறாக இருக்கிறது.
ர‌ஜினியின் உடல்நிலை வேகமாக தேறி வருகிறது. இருந்தாலும் அவர் சிறிது காலம் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கறாராக கூறியுள்ளனர். முக்கியமாக சண்டைக் காட்சிகளில் ரோப் கட்டி தொங்குவது கூடவே கூடாது. ச‌ரித்திரப் படமான ராணாவுக்கு ர‌ஜினி கடும் உழைப்பை தந்தாக வேண்டும். இப்போதைய சூழலில் அது சாத்தியமே இல்லை.
ஒரு வருட ஓய்வுக்குப் பிறகே ர‌ஜினியால் கடுமையான படப்பிடிப்பை தாங்க முடியுமா என்பதை கூறவே முடியும். இதனால் ராணா படத்திற்காக ஒப்பந்தம் செய்தவர்களை, ஒரு வருடத்துக்கு எந்த வேலையும் இல்லை, வேறு படங்கள் இருந்தால் அதனை கவனித்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்திருக்கிறார்கள்.
ஆக, இப்போதைக்கு ர‌ஜினி படம் எதையும் ரசிகர்கள் எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை.

டைரக்டர் பாலாவால் பிச்சைக்காரன் ஆன ‌தொழிலதிபர்!

ஹோட்டல், பார், பப், விஐபி கிளப் என பல தொழில்களில் சிறந்து விளங்கும் பிரபல தொழிலதிபரும் நடிகருமான ஆர்.கே.வை, பிச்சைக்காரன் ‌ரேஞ்சுக்கு வேடமிட்டு நடிக்க வைத்திருக்கிறார் டைரக்டர் பாலா.
சென்னையில் நிருபர்களை சந்தித்த நடிகர் ஆர்.கே., அவன் இவன் படத்தில் தான் ஏற்றிருக்கும் வேடம் இதுதான் என்று கூறி சில ஸ்டில்களை ‌வெளியிட்டார். வழக்கமான பாலா படத்தில் இருக்கும் அதே கோர முகம், புழுதி படர்ந்த தலைமுடி; தாடி என அக்மார்க் பிச்சைக்காரன் போன்ற தோற்றம் அது.
பாலா படத்தில் ஒரு காட்சியிலாவது நடிச்சா போதும், என்கிற கோரிக்கையுடன் பாலா அலுவலகத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் காத்துக்கிடக்கின்றனர். நான் கடவுள் படம் உருவானபோதே வாய்ப்பு கேட்டு நடையாய் நடந்தவர் ஆர்.கே.. பெரிய தொழிலதிபராக இருந்தாலும் அதற்காகவெல்லாம் நடிக்க வைப்பவரல்ல பாலா. எனவே பணபலத்தை ஒதுக்கி விட்டு ஒரு புதுமுகம் போலவே பாலாவிடம் வாய்ப்பு கேட்டார் ஆர்.கே.. அப்போது வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அவன் இவனில் வில்லன் கேரக்டர் கிடைத்திருக்கிறது ஆர்.கே.வுக்கு.
இதுபற்றி பெருமையுடன் கூறிய ஆர்.கே, நான் கடவுள் படத்தில் நடிக்க வேண்டியது. அது ரொம்ப கொடூரமான கேரக்டர்; வெயிட் பண்ணு என்று பாலா சார் சொன்னார். அவன் இவன் பட நேரத்தில் என்னை அழைத்தவர் இந்த காஸ்ட்யூம் மற்றும் தாடி கெட்டப்பை போடச் சொல்லி சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கும் ஏரியாவில் நடமாட வைத்தார். அப்படியே நான் ஓடிப் போய் விடுவேன் என்று நினைத்திருக்கலாம். ஆனால் நான் பிடிவாதமாக இருந்ததால் அப்புறம்தான் நடிக்க வைத்தார். சண்டை காட்சியில் ஒரு பள்ளம் பறித்து மெத்தையை போட்டு அதன் மேல் மணலை கொட்டி ஃபைட் செய்தோம். நான் கீழே விழும்போது மெத்தை அதிருமல்லவா? அது செயற்கையாக இருப்பதாக கருதிய பாலா மெத்தையை எடுங்க என்று கூறிவிட்டார். அப்புறம் என்ன? பெண்டு நிமிர்ந்துவிட்டது, என்றார்.

Sunday, June 12, 2011

Vengai MP3


Vengai - Devi Sri Prasad

Vengai - Devi Sri Prasad

Vengai Tamil Movie, Vengai Songs Free Download Music By Devi Sri Prasad - Vengai

Featuring : Dhanush, Tamannaah, Rajkiran

Production : Bharathi Reddy
Starring : Dhanush, Tamannaah, Rajkiran
Director : Hari
Lyrics : Viveka & Hari

Dhenam Dhenam - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Benny Dayal, Rap Written & Sung by Baba Sehgal

Kaalangathale-VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Karthik

Orey Oru - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Tippu & Harini

Pudikale Pudikudhu - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Mukesh & Suchithra

Yenna Solla Pore - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Devi Sri Prasad, Hook Phrase Vocals: M.L.R. Karthikeyan

Saturday, June 11, 2011

சூர்யா ஜோடியாக காஜல்!

Kajal Agarwalதம்பி கார்த்திக்கின் ஜோடியாக நான் மகான் அல்ல படத்தில் நடித்த காஜல் அகர்வால், இப்போது சூர்யாவின் புதிய ஜோடியாகியிருக்கிறார்.

'கோ' படத்துக்குப் பின் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் 'மாற்றான்'. இதில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'ஏழாம் அறிவு' படத்துக்குப் பின் அவர் நடிக்கும் படம் இது.

சூர்யாவின் ஜோடியாக நடிக்க பல புதுமுகங்களை பரிசீலித்தார் கே.வி.ஆனந்த். அனுஷ்கா, தமன்னா, மேக்னா ராஜ், அமலாபால் என பலரிடமும் பேச்சு நடந்தது.

இறுதியில் காஜல் அகர்வாலுக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது.

பாலிவுட்டுக்கு சென்றுவிடும் முடிவில் இருந்த காஜலுக்கு இது நல்ல வாய்ப்பாகத் தெரிந்ததால், இப்போதைக்கு மும்பை செல்லும் முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.

சமீபத்தில்தான் காஜலுக்கு கதை சொன்னார் இயக்குநர் ஆனந்த். கதையும் அதில் தனது பாத்திரமும் சிறப்பாக உள்ளதாக காஜல் திருப்தி வெளியிட்டுள்ளார்.

அவன் இவனில் ரசிகர்களை மிரட்டும் நிர்வாணம் காட்சி!

அவன் இவன் படத்தில் இடம்பெறும் நிர்வாண காட்சியொன்று ரசிகர்களை மிரட்டும் வகையி்ல் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மகான்களுக்கு மட்டுமே வருகிற மஹச நிர்வாண ஆசை இப்போது தமிழ் சினிமா நட்சத்திரங்களை தொற்றிக் கொண்டிருக்கிறது.
நிர்வாணத்தை ரசிக்கும் ரசிகர் கூட்டம் இருப்பதாலோ என்னவோ… அவ்வப்போது வெளியாகும் படங்களில் அட்லீஸ்ட்ஸ் அரை நிர்வாண காட்சியையாவது வலுக்கட்டாயமாக திணித்து விடுகிறார்கள் இயக்குனர்கள். அவன் இவன் படத்திலும் ஒரு நிர்வாண காட்சி இருக்கிறதாம்.
அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் அவன் இவன் படத்தில் பிரபல டைரக்டர் ஜி.எம்.குமார் ஒரு காட்சியில் முழு நிர்வாணமாக நடித்திருக்கிறாராம். சுமார் மூன்று நாட்கள் இந்த காட்சியை படமாக்கியிருக்கிறார் பாலா. அத்தனை நாட்களும் நிர்வாணமாகவே திரிந்தாராம் மனுஷன். இந்த படத்தில் யாருக்கு விருது கிடைக்குதோ, இல்லையோ. குமாருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று கிசுகிசுக்கிறது அவன் இவன் யூனிட். அது இந்த மஹா நிர்வாணத்திற்காக என்பதுதான் ஹைலைட். படத்தின் டைரக்டர், பாலா என்பதால் அந்த நிர்வாண காட்சியை வலுக்கட்டாயமாக திணித்திருக்க மாட்டார் என நம்புவோம்.

அவன் இவன் மாதிரி இனி நடிக்க மாட்டேன்: விஷால்!


“அவன் இவன்” படத்திற்காக நான் பெற்ற துன்பங்களை சொல்ல முடியாது. எத்தனை கோடி கொடுத்தாலும் இனிமேல், அதுபோன்ற கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் நடிகர் விஷால். டைரக்டர் பாலா இயக்கத்தில், ஆர்யா, விஷால் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் படம் “அவன் இவன்”. படத்தில் வித்யாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் விஷால், படம் குறித்தும், தன்னுடைய நடிப்பு அனுபவங்கள் குறித்தும் கூறியதாவது,
“அவன் இவன்” படத்தில் நானும், ஆர்யாவும் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 200 நாட்கள் படத்தில் நடித்தேன். அதுவும் ஒரு கண் மாறு கண்ணாக. இப்படி நடித்த போது எனக்கு ஏற்பட்ட துன்பங்களை சொல்ல முடியாது. தினமும் சூட்டிங் முடிந்து இரவு ஹோட்டலில் தங்கும் போது தலை மற்றும் கண் வலியால் மிகவும் அவதிப்பட்டேன். எப்படா படத்தின் சூட்டிங் முடியும் என்று இருந்தது. கோடி, கோடியாக கொடுத்தாலும் இனிமேல் இதுபோன்ற கேரக்டரில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
பொதுவாக பாலா, அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் பாராட்ட மாட்டார். ஆனால் இந்தபடத்தில் ஒரு காட்சியில் நான் 70 அடி உயர மரத்தில் இருந்து குதிப்பது போன்று ஒரு காட்சி. இந்தகாட்சியில் யாருடைய துணையும் இன்றி நானே தைரியமாக நடித்தேன். இந்தகாட்சியை படமாக்கிய பின்னர், அதை பார்த்த பாலா கலங்கிவிட்டார். எப்படி நடிச்ச…?என்று என் முதுகில் ‌தட்டிக் கொடுத்தார். உனக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறினார்.
இந்தபடம் முழுக்க மாறு கண்ணுடன் நடித்துள்ளேன். இதுவரை யாரும் இப்படி ஒரு கேரக்டரில் நடித்தது இல்லை. ஆகையால் இதனை கின்னஸ் சாதனைக்கு அனுப்ப முயற்சிகள் நடந்து வருகிறது. படத்தில் நடிக்க நிறைய சிரமப்பட்டாலும், நிச்சயம் இந்தபடம் எனக்கு விருது வாங்கி தரும் படமாக இருக்கும். அப்படி எனக்கு கிடைத்தால் அந்த பெருமை ஆர்யாவையே சாரும். காரணம் இந்தபடத்தில் என்னை நடிக்க வைத்தது அவன் தான். எனக்கும், அவனுக்கும் இடையிலான நட்பு, 16 வருட நட்பு. அவன் ஒரு அதிசியப்பிறவி. அவனுக்கு கர்வம், போட்டி, பொறாமை போன்றவை எதுவும், கிடையாது. சில காட்சிகளில் எனக்கும் பெயர் கிடைக்கும் என்பது அவனுகே தெரியும், ஆனாலும் அவன் பொறாமைப்படவில்லை.
தற்போது பிரபுதேவாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். திருமணத்திற்கு இப்போது அவசரம் வேண்டாம் என நினைக்கிறேன். இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து செய்யலாம் என்று எண்ணியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


ஜூன் 14-ம் தேதி டிஸ்சார்ஜ் ஆகிறார் ரஜினி!



சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வரும் செவ்வாய்க்கிழமை அதாவது ஜுன் 14-ம் தேதி டிஸ்சார்ஜ் ஆகிறார்.
சிறுநீரக பாதிப்பு காரணமாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சகஜ நிலைக்கு திரும்பியது. சாதாரண உணவை சாப்பிட ஆரம்பித்துள்ளார். மருத்துவமனை வளாகத்திலேயே தொடர்ந்து நடைபயிற்சி செய்து வருகிறார்.
வழக்கமான வேக நடையும், சுறுசுறுப்பும் அவரிடம் திரும்பிவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ்!!
ரஜினிகாந்த் இன்னும் 4 நாட்களில் சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுகிறார். என்றாலும், அவர் சிங்கப்பூரிலேயே சில வாரங்கள் தங்கியிருந்து, உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று வரவேண்டியதிருக்கும். இதற்காக சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறார்கள். மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் ரஜினியுடன் தங்கியிருப்பார்கள்.


தீபிகாவுக்கு போலீஸ் பாதுகாப்பு; கடத்தப்படும் அபாயம்


deepika-raana-11-06-11
மும்பையில் உள்ள அபய்காந்தி என்ற பிரபல தாதா, தன்னுடைய அறையில் தீபிகா படுகோன் போட்டோவை ஒட்டி வைத்து அதற்கு கீழே வரும் ஜூலை 5ம் தேதிக்குள் இவரை திருமணம் செய்வேன் என்று எழுது வைத்துள்ளார். சமீபத்தில் தாதாக்களின் இருப்பிடங்களில் அதிரடி சோதனையை நடத்தியபோது போலீஸ் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுவாக ரசிகர்கள் தங்கள் அபிமான ஹீரோயின்களின் போட்டோக்களை தங்கள் அறைகளில் ஒட்டி வைப்பது வழக்கம்தான் என்றாலும், மும்மை தாதாவான அபய் இப்படி எழுதுவைத்திருப்பதால், தீபிகாவை கடத்தும் எண்ணத்தில் இருக்கலாம் என்று போலீச் சந்தேகப்படுகிறது. அதனால் தீபிகாவுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிம்புவை ஹிந்தியில் அறிமுகப்படுத்தும் கௌதம் மேனன்


simbu-gautham-menon-11-06-11
'விண்னைதாண்டி வருவாயா' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்துவரும் கௌதம் மேனன், சிம்புவை ஹிந்தியில் அறிமுகப்படுத்த விரும்புகிறார். தமிழ் 'விண்ணைதாண்டி வருவாயா'வில் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க கேட்டிருக்கிறார். சிம்புவும் ஓகே சொல்லிவிட்டதாக தகவல்.

முதலில் கெஸ்ட் ரோல்  பிறகு, சிம்புவை முழுநீள‌ ஹீரோவாக வைத்து ஒரு ஹிந்தி படத்தை இயக்குவதாக சொல்லி இருகிறார் கௌதம்.

Thursday, June 9, 2011

சூர்யாவை மிஸ் செய்த டாப்ஸி


suriya-kajal-agarwal-10-06-11
கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'மாற்றான்'. இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த 'அயன்' மாபெரும் வெற்றி பெற்றதால் இப்படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அயனில் நடித்த தமன்னா, அதன் பின் தமிழ் சினிமாவில் மிக முக்கியமானதொரு இடத்தை பிடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே, அதனால் இப்படத்தில் நடிக்கும் ஹீரோயின் தேர்வையும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த்து கோலிவுட்.

சூர்யா மற்றும் கேவி ஆனந்தின் முதல் சாய்ஸ்சாக இருந்தவர் 'அடுகளம்' படத்தின் நாயகி டாப்ஸிதான், ஆனால் அவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்ததால் மாற்றான் டீமுக்கு தேவையான தேதிகளை அவரால் ஒதுக்க முடியவில்லை. எனவே மாற்றானில் டாப்ஸிக்கு மாற்றாக காஜல் அவர்வால் வந்துவிட்டார்.

Wednesday, June 8, 2011

மங்காத்தா படப்பிடிப்பு முடிந்தது



வெங்கட்பிரபு இயக்கத்தில் அ‌‌ஜீத் நடித்துவரும் அவரது 50வது படமான மங்காத்தாவின் இறுதிநாள் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. நேற்றுடன் அ‌ஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன.
ஐபிஎல் கி‌ரிக்கெட் பெட்டிங் சூதாட்டத்தை மையமாக வைத்து மங்காத்தாவை வெங்கட்பிரபு உருவாக்கியிருக்கிறார். இதில் விநாயக் மகாதேவன் என்கிற கெட்டவராக நடித்திருக்கிறார் அ‌ஜீத். அதாவது வில்லன். போலீஸ் அதிகா‌ரியாக அர்ஜுன். இவர்கள் தவிர த்‌ரிஷா, பிரேம்‌ஜி, லட்சுமிராய் என நீள்கிறது நடிகர்கள் பட்டியல். யுவன் இசை.
சென்னை, மும்பை, பாங்காங் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் போஸ்ட்புரொடக்சன் பணிகள் முடிந்து திரையில் மங்காத்தாவை ரசிகர்கள் ரசிக்கலாம்.

நட்சத்திர ஓட்டலில் தம்பி, தங்கைக்கு விருந்தளித்த சிம்பு



கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் நடந்த போடா போடி படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் தம்பி குறளரசன் பிறந்தநாளையொட்டி இரு தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.
நட்சத்திர ஓட்டலில் பெரிய “ஹால்” எடுத்து குறளரசன் பிறந்த நாள் விழாவை கொண்டாடி இன்ப அதிர்ச்சியூட்டினார். இதில் தங்கை இலக்கியாவும் பங்கேற்றார். அறுசுவை உணவுடன் விருந்தும் நடந்தது.
இதுபற்றி சிம்பு கூறும் போது, என் தம்பிக்காக பிறந்த நாள் விருந்தை ஏற்பாடு செய்தேன். தம்பியின் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சினிமா சம்பந்தப்பட்ட யாரையும் அழைக்கவில்லை. குறளரசன் சினிமாவில் நடிப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது என்றார்.


“தூள்”, “சாமி” மாதிரி கதைகளில் நடிக்க ஆசை- விக்ரம்





“தெய்வத்திருமகன்” படத்தையடுத்து விக்ரம் “ராஜபாட்டை” என்ற படத்தில் நடிக்கிறார். சுசீந்திரன் இயக்குகிறார். பிரதீஷ், சந்தோஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இவர்கள் பிரபல பட அதிபர் ரமேஷ்பாபுவின் மகன்கள் ஆவர்.
ராஜபாட்டை படபூஜை வடபழனியில் நடந்தது. பின்னர் விக்ரம் அளித்த பேட்டி வருமாறு:-
ரொம்பநாளைக்கு பிறகு கமர்ஷியல் மசாலாவுடன் தயாராகும், ராஜபாட்டை படத்தில் நடிக்கிறேன். இந்த படம் மாறுபட்ட கதையம்சம் கொண்டது. தில், தூள், சாமி மாதிரி கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் இருந்தது. ராஜபாட்டை படத்தில் அது நிறைவேறியுள்ளது.திறமையான டெக்னீசியன்கள் இப்படத்தில் உள்ளனர். எனவே சிறப்பாக உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்படத்தில் கதாநாயகியாக தீக்ஷாசேத் நடிக்கிறார். இவர் பிரபல தெலுங்கு நடிகை. அவர் கூறும்போது விக்ரம் திறமையான நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நடிப்பு பற்றி விக்ரமிடம் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார்.
சுசீந்திரன் கூறும்போது, காமெடி கலந்த ஆக்ஷன் படமாக ராஜபாட்டை உருவாகிறது. சென்னையில் நடக்கும் கதை என்பதால் முழு படப்பிடிப்பும் இங்கேயே நடைபெறும் என்றார். நடிகர் தம்பிராமையா, ஒளிப்பதிவாளர் மதி ஆகியோர் பங்கேற்றனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர்ராஜா இசை அமைக்கிறார்.

ரஜினிகாந்த் ஆலோசனைப்படி “ராகவேந்திரா கோவிலை கட்டினேன்” -நடிகர் லாரன்ஸ்





நடிகர் ராகவ லாரன்ஸ் தீவிர ராகவேந்திரர் பக்தர். அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயலில் ராகவேந்திரருக்கு கோவிலும் கட்டியுள்ளார். கடவுள் நம்பிக்கை பற்றி லாரன்ஸ் அளித்த பேட்டி வருமாறு:-
கடவுள் இமயமலையில் இல்லை. கஷ்டப்படுவோருக்கு உதவி செய்வதில் இருக்கிறார். நான் ஆறு வயதில் இறைவனை உணர்ந்தேன். எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடவுள் அருளாலும், என் அம்மாவின் பிரார்த்தனையாலும் பிழைத்தேன்.
நான் ராகவேந்திரரின் பக்தன். அவருக்கு கோவில் கட்ட முயன்றபோது ரஜினிகாந்த் ஆலோசனைகள் வழங்கினார். அவர் தந்த ராகவேந்திரரின் மாதிரி போட்டோவை வைத்துதான் சிலையை உருவாக்கினேன்.
குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள் மேல் அதிக பிரியம் காட்டுவார்கள். அதுபோல்தான் நான் கடவுளை பார்க்கிறேன். மனிதன்தான் முதல் கடவுள். குடும்பத்தை தவிக்கவிட்டு சன்னியாசம் போவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் மதிய உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.
இப்போது நிறைய பேருக்கு மதிய உணவு போடுகிறேன். கடவுள்தான் இதற்கெல்லாம் காரணம். வாழ்க்கையை நல்வழிபடுத்த தியானம், யோகா அவசியம். நான் தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.
இவ்வாறு லாரன்ஸ் கூறினார்.

விஷாலுக்கு தேசிய விருது! டைரக்டர் பாலா நம்பிக்கை!!





“பிதாமகன்” படம் விக்ரமிற்கு எப்படி தேசிய விருது பெற்று தந்ததோ, அதுபோல “அவன் இவன்” படமும், விஷாலுக்கு நிச்சயம் விருது பெற்று தரும் என்று கூறுகிறார் டைரக்டர் பாலா. “சேது”, “பிதாமகன்”, “நான் கடவுள்” உள்ளிட்ட படங்களை இயக்கிய டைரக்டர் பாலா, அடுத்து ஆர்யா, விஷாலை வைத்து அவன் இவன் என்ற படத்தை இயக்கியுள்ளார். பாலாவின் வழக்கமான படத்தை போன்று இல்லாமல், இந்தபடத்தை சிறிது கமர்ஷியலாக எடுத்திருக்கிறார்.
இந்நிலையில் “அவன் இவன்” குறித்து பாலா பேசியதாவது, பொதுவாக என்னுடைய படங்கள் உணர்வுபூர்வமாக இருக்கும், ஆனால் “அவன் இவன்” படம் சற்று வேடிக்கை நிறைந்ததாகவும், அதேசமயம் உணர்வுபூர்வமாகவும் இருக்கும். ஒரு கிராமத்தில் இரண்டு திருடுர்கள் செய்யும் அட்டகாசமும், அவர்களது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களும் தான் படத்தின் கதை. இந்தபடத்தில் விஷால் மிகவும் வித்யாசமான கேரக்டரில் நடித்து இருக்கிறார். அவன் இவனுக்கு பல ரிஸ்க் எடுத்திருக்கிறார். படத்தில் ஒரு காட்சியில் மிகவும் உயரமான இடத்தில் இருந்து குதிப்பது போன்று அமைக்கப்பட்டது. அதில் டூப் போடாமல் அவரே நடித்திருந்தார். மேலும் சூட்டிங்கில பல காட்சிகளில் அவருக்கு அடிபட்டது. அதையும் தாண்டி அவர் சிறப்பாக நடித்தார். குறிப்பாக படம்முழுக்க மாறு கண்ணுடன் நடித்திருப்பது மிகுந்த சிரமமான காரியம். ஆனால் அதையும் அவர் சிறப்பாக நடித்து கொடுத்தார். நிச்சயம் இந்தபடம் அவருக்கு விருது பெற்று தரும் படமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
பொதுவாக பாலா தான், தன்னுடைய படங்களை எடுக்க இழுத்தடிப்பார். ஆனால் இந்ததடவை பாலா படத்தை சீக்கிரமாக முடித்துவிட்டார். ஆனால் ரிலீஸ் செய்வதில் ஏற்பட்ட பல பிரச்சனைகளால் இப்படம் தொடர்ந்து தள்ளிக்கொண்டே போனது. இப்போது இறுதியாக இம்மாதம் ஜூன் 17ம் தேதி அவன் இவன் திரைக்கு வர இருக்கிறது.

தேமுதிகவினரின் தாக்குதல் தொடர்ந்தால் திமுகவில் சேர வடிவேலு முடிவு!





தேமுதிகவினர் தொடர்ந்து தனது வீடுகளுக்கு முன்பு நின்று கண்டபடி அசிங்கமாக பேசி வருவதால, இந்த நிலை தொடர்ந்தால் பேசாமல் திமுகவில் சேர்ந்து கட்சி ரீதியாக அவர்களை ஒரு கை பார்ப்பது என்ற முடிவுக்கு வைகைப் புயல் வடிவேலு வந்துள்ளதாக தெரிகிறது.
வாயால் கெடுவது என்பதற்கு வடிவேலுதான் சரியான உதாரணம். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தன் மீதும், தனது நடிப்பு மீதும் வைத்திருந்த, வைத்துள்ள நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ளாமல், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தேர்தல் பிரசாரத்தின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சரமாரியாக வாய்க்கு வந்தபடி பேசி பிரசாரம் செய்து வீண் வம்பில் மாட்டிக் கொண்டு விட்டார்.
இப்போது தேர்தல் முடிவு பாதகமாக வந்து விட்டதால் என்ன செய்வது என்று புரியாமல் தற்போது வீட்டோடு முடங்கியுள்ளார்.
மறுபக்கம் தேமுதிகவினரோ பிரச்சினையை இத்துடன் முடிக்காமல் வளர்த்துக் கொண்டே போகின்றனராம். வடிவேலு வீட்டுக்கு முன்பு திடீர் திடீரென கூடுவது, இருக்கிற கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏசுவது, தாறுமாறாக திட்டுவது என்று பொழுதைக் கழித்து வருகிறார்கள்.
வடிவேலுதான் நொந்து நூடூல்ஸாகிப் போய் விட்டாரே என்று விடாமல் தொடர்ந்து அவர்கள் அநாகரீகமாக நடந்து வருவதால் வடிவேலு கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
இதுகுறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்நது புலம்பியபடி வருகிறாராம் வடிவேலு. என்னைத்தான் வீட்டோடு முடக்கி விட்டார்களே, பிறகு எதற்கு தொடர்ந்து அசிங்கமாக பேசி வருகிறார்கள். இப்படியே இவர்கள் தொடர்ந்து வந்தால் நானும் பேசாமல் திமுகவில் சேர்ந்து கட்சி ரீதியாக இவர்களை ஒரு கை பார்க்க வேண்டியதுதான், வேறென்னத்த செய்ய என்று கூறுகிறாராம் வடிவேலு.
இதற்கிடையே, உலகம் என்ற படத்தில் வடிவேலு நடிக்கவிருக்கிறார். இதில் 25 வேடங்களில் அவர் வரவுள்ளாராம். இந்தப் படத்தை வெளியில் விட்டால் போதும் இழந்த செல்வாக்கை மீண்டும் பிடித்து விடலாம், அதற்குப் பிறகு பத்து விஜயகாந்த வந்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அந்தப் படம் தொடர்பான பணிகளில் படு தீவிரமாக குதித்துள்ளாராம் வடிவேலு.

மங்காத்தா ரிலீசன்று மோதல் வருமா?


mankatha-trisha-07-06-11
மங்காத்தா அஜீத்துக்கு 50வது படம், அதே போல் த்ரிஷாவுக்கு 40வது படம். மங்காத்தா பட ரிலீசன்று த்ரிஷாவுக்கு கட் அவுட், பேனர், பால் அபிஷேகம் என்று அமர்க்கள படுத்திவிட வேண்டும் என்று, த்ரிஷா ரசிகர்கள் இப்போதிருந்தே தயாராகி வருவதாக தகவல். அஜீத் தன் ரசிகர் மன்றங்களை கலைத்திருந்தாலும் மங்காத்தா ரிலீசன்று பாலபிஷேகம், பீர் அபிஷேகம் என்று வழக்கமான எதையும் கைவிட போவதில்லை என்று அஜீத் ரசிகர்களும் தயாராகத்தான் இருக்கிறார்கள். இதில் விசயம் என்னவென்றால் இதற்கு முன் அஜீத், த்ரிஷா நடித்த கிரீடம் பட ரிலீசன்று கட் அவுட், பேனர் வைப்பதற்கு இடம் ஒதுக்குவதில் அஜீத், த்ரிஷா ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு அடிதடி வரை போனது ஞாபகம் இருக்கலாம்.

மங்காத்தா ரிலீசன்று மோதல் வருமா?


mankatha-trisha-07-06-11
மங்காத்தா அஜீத்துக்கு 50வது படம், அதே போல் த்ரிஷாவுக்கு 40வது படம். மங்காத்தா பட ரிலீசன்று த்ரிஷாவுக்கு கட் அவுட், பேனர், பால் அபிஷேகம் என்று அமர்க்கள படுத்திவிட வேண்டும் என்று, த்ரிஷா ரசிகர்கள் இப்போதிருந்தே தயாராகி வருவதாக தகவல். அஜீத் தன் ரசிகர் மன்றங்களை கலைத்திருந்தாலும் மங்காத்தா ரிலீசன்று பாலபிஷேகம், பீர் அபிஷேகம் என்று வழக்கமான எதையும் கைவிட போவதில்லை என்று அஜீத் ரசிகர்களும் தயாராகத்தான் இருக்கிறார்கள். இதில் விசயம் என்னவென்றால் இதற்கு முன் அஜீத், த்ரிஷா நடித்த கிரீடம் பட ரிலீசன்று கட் அவுட், பேனர் வைப்பதற்கு இடம் ஒதுக்குவதில் அஜீத், த்ரிஷா ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு அடிதடி வரை போனது ஞாபகம் இருக்கலாம்.

இந்தி நடிகை சரா கானின் ஆபாச படம் வெளியானததால் பரபரப்பு!



பாலிவுட்டின் வளரும் நடிகைகளில் சரா கானும் ஒருவர். மாஜி நாயகி சல்மா ஆகாவின் மகளான, இவரின் ஆபாச படங்கள் சிலதினங்களுக்கு முன்னர் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரா கான் போலீசில் புகார் செய்துள்ளார்.
1980களில் இந்தி படங்களில் நடித்தவர் சல்மா ஆகா. ஹீனா படத்தின் மூலம் பிரபலமான இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்தவரான சல்மா, மும்பையில் வசித்து வருகிறார். தற்போது படங்களில் நடிக்காவிட்டாலும் தனது மகள் சரா கானை நடிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இணையதளம் ஒன்றில் சரா கானின் ஆபாச படம் வெளியானது. இதைபார்த்த அதிர்ச்சியடைந்த சரா போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து சராவும், அவரது தாயார் சல்மா ஆகாவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது சரா கூறியதாவது, என்னுடைய படங்கள் சித்தரிக்கப்பட்டு ஆபாசமாகவும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி எனது நண்பர் ஒருவர் எனக்கு தகவல் தெரிவித்தார். இதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அது என்னுடைய படம் அல்ல. எனது பெயரை களங்கப்படுத்த யாரோ இதுபோன்ற செயலில் ‌ஈடுபட்டு இருக்கின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளேன். அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விரைவில் அந்த நபரை கைது செய்தவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

செப்டம்பரில் ராணா படப்பிடிப்பில் பங்கேற்கிறார் ரஜினி!



ரஜினியின் ராணா படப்பிடிப்பு மீண்டும் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்குகிறது.
ராணா படப்பிடிப்பு ஆரம்பமான முதல்நாளிலேயே ரஜினிக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டது. அன்று முதல் தொடர்ந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இப்போது சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் ரஜினி.
அவரது நோய்க்கான மூல காரணத்தை கண்டறிந்த சிங்கப்பூர் மருத்து நிபுணர்கள், தீவிர சிகிச்சை அளித்ததில், ரஜினி குணமடைந்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது, அது தேவையில்லை என்றாகிவிட்டது. அவரது சிறுநீரகங்கள் முழுமையான செயல்பாட்டுக்கு திரும்பிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் ரஜினிக்கு சிகிச்சை முடிந்துவிடும் என்றும், அதன் பின்னர் அவர் சிங்கப்பூரிலேயே முழுமையாக ஓய்வு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஓய்வுக்குப் பிறகு சென்னை திரும்பும் ரஜினி, செப்டம்பர் மாதம் ராணா படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அதற்கு முன்பே படப்பிடிப்பை தொடங்கும் இயக்குநர் ரவிக்குமார், ரஜினி இல்லாத சில காட்சிகளை வில்லன் சோனு சூட் மற்றும் நாயகி தீபிகாவை வைத்து படமாக்குவார் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்தப் படத்தில் ரஜினி அதிரடி சண்டைக் காட்சிகளில் நடிக்க திட்டமிட்டு அதற்கேற்ப காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்த காட்சிகள் மாற்றப்பட்டு, ரஜினியின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்!



விவாகரத்தான புதிதில் அழுதுவடியும் முகத்துடன் காட்சி தந்த சோனியா அகர்வாலா இது! என்று ஒருவருக்கொருவர் ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டனர், நேற்றைய பட பூஜையொன்றில் அவரைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள்.
கையில்லாத, ‘லோ நெக்’ கவுனில் உடலின் அத்தனை அழகுகளும் பளிச்சிட வந்திருந்தார் சோனியா அகர்வால். முகத்தில் அநியாயத்துக்கு இளமை கூடியிருந்தது. ஹீரோயினாகவே இன்னொரு ரவுண்ட் வர அவர் ஆயத்தமாவது தெரிந்தது.
தமிழில் இப்போது இரண்டு படங்களில் புதிதாக ஒப்பந்தமாகியுள்ளார் சோனியா. இந்த இரண்டிலுமே அவர்தான நாயகி. குறிப்பாக மாதா பிதா குரு என்ற படத்தில் கதாநாயகனை விட முக்கியத்துவம் வாய்ந்த வேடம் அவருக்கு.
தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இரண்டு படங்களில் நாயகியாக நடிக்கிறார்.
திருமணமான பின் ஹீரோயினாக நடித்து ஜெயித்தவர் ரேவதிதான். அவருக்குப் பின் இப்போது சோனியா அகர்வால்தான் என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளனவாம்.
இந்த இரண்டாவது சுற்றை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் கவனமாக இருக்கிறார் சோனியா. அதன் விளைவுதான் அதிரடியாக கவர்ச்சிக்கு தாவியுள்ளாராம். பிகினி உள்பட, சென்சார் அனுமதிக்கும் அதிகபட்ச கவர்ச்சிக்கு தான் தயார் என்பதுதான் சோனியா தனது தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வரும் தகவல். அதற்கு கைமேல் பலன் கிடைத்த வண்ணம் உள்ளதாம்!

ஜூன் 17-ல் ‘அவன் இவன்’!



பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள அவன் இவன் திரைப்படம் வரும் ஜூன் 17-ம் தேதி வெளியாகிறது.
நகைச்சுவை, அதிரடி ஆக்ஷன் கலந்து உருவாகியுள்ள பாலாவின் அவன் படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. படம் முழுமையாக முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
ஆரம்பத்தில் இந்தப் படம் சன் பிக்சர்ஸ் வெளியீடாக வரவிருந்தது. ஆனால் மாறியுள்ள அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இப்போது, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் தன் ஏஜிஎஸ் மூவீஸ் பேனரிலேயே படத்தை வெளியிடுகிறார்.
இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி, அதன் தொழில்நுட்பக் கலைஞர்களுக்காக சமீபத்தில் திரையிடப்படது. படம் பார்த்த அனைவரும் வயிறுகுலுங்க சிரித்து மகிழ்ந்தனராம்.
விஷால், ஆர்யா, ஆர்கே, ஜிஎம் குமார், ஜனனி, அம்பிகா என ஏராளமான நட்சத்திரங்கள் படத்தில் உள்ளனர்.
தெலுங்கில் இந்தப் படம் ‘வாடு வீடு’ என டப் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படமும் ஜூன் 17-ம் தேதியே வெளியாகிறது.

ஜெ.,வுடன் கமல், பிரபு, விஜய், கவுதமி சந்திப்பு!



தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விஜய், நடிகை கவுதமி உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் சந்தித்தனர்.
இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதாவை, முன்னணி திரைப்பட நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி, மகள்கள் அக்ஷரா ஹாசன், சுப்புலட்சுமி, நடிகர் பிரபு மற்றும் அவரது மனைவி, பிரபுவின் சித்தப்பா மகன் கிரி சண்முகம் மற்றும் அவரது மனைவி, பிரபுவின் சம்பந்தி மதிவாணன் மற்றும் அவரது மனைவி, ராம்குமாரின் மகன் துஷ்யந்த், நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், பழம்பெரும் நடிகைகள் சி.சுகுமாரி, குமாரி சச்சு என்கிற பி.எஸ்.சரஸ்வதி, எஸ்.என்.லட்சுமி, ராஜஸ்ரீ, காஞ்சனா, பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, திரைப்பட தயாரிப்பாளர் ஜெயந்தி ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், ஒளிப்பதிவாளர் பாபு ஆகியோர் சந்தித்து, நல்ல பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதற்கு தங்களின் மகிழ்ச்சி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
அவர்களின் வாழ்த்துக்களை இன்முகத்தோடு பெற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, திரைப்படத் துறையினர் தன்னை நேரில் வந்து சந்தித்து பாராட்டியமைக்கு தனது நன்றியை மகிழ்ச்சிப் பொங்க தெரிவித்துக் கொண்டார், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளாமருக்கு ஏங்கும் அனுயா!

முதல் படமான சிவா மனசுல சக்தி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அனுயா, பின்னர் மதுரை சம்பவம் படத்தின் மூலம் ரசிகர்களின் கனவுக் கன்னியாக உருவெடுத்தார்.
குடும்பப் பாங்கான வேடங்களை விட கவர்ச்சிதான் அனுயாவுக்குப் பொருத்தமாக இருப்பதாக பலரும் கூறுகிறார்களாம். இதனால் முழு நீள கவர்ச்சி வேடத்தில் நடிக்க அனுயாவும் ரெடியாகி விட்டார்.
தனக்குப் பொருத்தமான நல்ல கவர்ச்சிகரமான கதையை தற்போது தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளாராம். விரைவில் கதையை முடிவு செய்து நடிக்கத் தயாராகி வருகிறாராம்.
இதுகுறித்து அனுயா கூறுகையில், சிவா மனசுல சக்தி, நகரம் ஆகிய படங்களில் எனக்கு நல்ல வேடம் கிடைத்தது. இருப்பினும் கவர்ச்சியாக நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று பலரும் கூறுகிறார்கள். நானும் கவர்ச்சிகரமான வேடத்தை தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளேன். நல்ல கதை கிடைத்ததும் நடிப்பேன் என்கிறார் அனுயா.
இதற்கிடையே ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் அனுயாவும் இடம் பெற்றிருக்கிறாராம். ஆனால் நாயகியாக அல்ல, நாயகிகளில் ஒருவரான இலியானாவின் அக்கா வேடத்தில் வருகிறாராம்.
அக்கா கேரக்டர் என்றாலும் கூட அனைவரும் பேசும்படியான வேடமாம். படம் வந்த பிறகு பாருங்கள், நானும் நிறைய பேசப்படுவேன் என்கிறார் தனது அழகுச் சிரிப்பை சிந்தியபடி.


த்ரிஷா..எக்ஸ்டிரா காசு-செக்ஸி பிகினி!



ரூ. 25 லட்சம் எக்ஸ்டிராவாக வாங்கிக் கொண்டு செக்ஸியான பிகினி அணிந்து நடித்துள்ளாராம் திரிஷா -தெலுங்குப் படத்திற்காக.
மலையாளத்தில் பாடிகார்ட் என்ற பெயரில் உருவாகி, பின்னர் தமிழில் காவலன் என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் தற்போது தெலுங்கில் பாடிகார்ட் என்ற பெயரிலேயே தயாராகிறது.
பாடிகார்ட் படத்தில் செக்ஸியான காட்சிகள் எதுவும் கிடையாது. இயல்பான கதையோட்டத்தைக் கொண்ட அப்படத்தை பெரிய அளவில் கொம்பாக்காமல் தமிழிலும் சற்று இயல்பாக எடுத்ததால் அப்படம் பெரிய ஹிட் ஆனது.
இந்த நிலையில், தெலுங்கு பாடிகார்டில் பெரிய அளவில் மசாலாவை சேர்த்து இணைக்கவுள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் திரிஷா. படத்தில் ஒரு காட்சியில் பிகினி உடையில் அவரை உலவ விட்டுள்ளனர்.
இந்தக் காட்சியில் நடிக்க முதலில் தயங்கியுள்ளார் திரிஷா. எக்ஸ்டிராவாக தருவதாக தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் தெரிவிக்கவே சம்மதித்துள்ளாராம் திரிஷா. இந்தக் காட்சியில் நடிப்பதற்காக எக்ஸ்டிராவாக ரூ. 25 லட்சத்தை வாங்கியுள்ளாராம் திரிஷா.
தெலுங்கில் தற்போது நாயகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. போட்டியை சமாளிக்க கவர்ச்சிக் களத்தில் குதித்து ரசிகர்களை இழுப்பதில் நாயகிகளிடையே பெரும் அடிதடியே காணப்படுகிறது. இந்த நிலையில்தான் போட்டிக் களத்தில் திரிஷாவும் இப்படிக் குதித்துள்ளாராம்.
அதை விட முக்கியம் இது தெலுங்குப் படமாச்சே, கவர்ச்சி மசாலா இல்லையென்றால் எப்படி…?

ர‌ஜினியின் சம்பளம்



சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ர‌ஜினி நலமுடன் திரும்ப வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனும் பிரார்த்தனை செய்து வருகிறான். இந்நிலையில் ர‌ஜினியின் சம்பளம் குறித்து சுவாரஸியமான தகவல் கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது.
ஆசியாவில் ஜாக்கிசானுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் நடிகர் ர‌ஜினி. ச‌ரி, ராணா படத்துக்காக அவரது சம்பளம் எவ்வளவு?
சுமார் 24 கோடிகள் ராணாவுக்காக ர‌ஜினிக்கு பேசப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இது தவிர லாபத்தில் பங்கும் உண்டு என்கின்றன நெருக்கமான வட்டாரங்கள். ராணா பற்றி மேலுமொரு தகவல். படத்தை சுமார் 40 கோடிக்கு இன்சூர் செய்திருப்பதாகவும், படம் நின்று போனாலும் இன்சூரன்ஸ் பணம் கியாரண்டி என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

Friday, June 3, 2011

சீமான் மீது நடிகை புகார் – பின்னணியில் காங்கிரஸ்?

நாம் தமிழர் கட்சி‌‌த் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகா‌ரின் பே‌ரில் கற்பழிப்பு உள்ளிட்ட மூன்று பி‌ரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சீமானுடன் நெருக்கமாக இருந்ததாக விஜயலட்சுமி கூறும் நாட்களில் சீமான் ஈழப் போராட்டத்தில் தீவிரமாக இருந்ததாகவும், பலமுறை சிறை சென்றதாகவும் அதே போலீஸார் தொpவித்துள்ளனர். இந்த‌க் கூற்று விஜயலட்சுமியின் புகார் திட்டமிட்ட சதியோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜயலட்சுமி கமிஷன‌ரிடம் புகார் கொடுக்க வரும் செய்தி காங்கிரஸ் பிரமுகர் ஒருவ‌ரின் எஸ்எம்எஸ் தகவல் மூலமே பத்தி‌ரிகையாளர்கள் அறிந்து கொண்டனர். அந்த தகவலின் அடிப்படையில் கமிஷனர் அலுவலகம் சென்ற போது விஜயலட்சுமி புகார் தந்திருக்கவில்லை. ஒரு நடிகை புகார் தரும் விஷயம் எப்படி காங்கிரஸ் பிரமுகருக்கு முன்கூட்டியே தெ‌ரிந்தது?
காங்கிரஸை தமிழகத்தில் படுதோல்வியடைச் செய்ததில் சீமானுக்கு பெரும் பங்கு‌ண்டு. அந்த வன்மத்தின் எதிரொலிதான் இந்த‌ப் புகார் என்று நம்பவே அதிக வாய்ப்புள்ளது.

நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான்

இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 46 வயது ஆகிறது. 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார்.
அவருக்கு வயது ஏறினாலும் பெண் ரசிகைகள் குறையவில்லை. சமீபத்தில் ரிலீசான “தபாங்” படம் ஹிட்டாகி சல்மான்கானுக்கு மேலும் மவுசு காட்டியுள்ளது.
எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று சல்மான்கானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் ரொம்ப கஷ்டமானவன். என்னோடு யாரும் நிரந்தரமாக இருக்க முடியாது. இதுவரை நான்கு பெண்களை காதலித்து இருக்கிறேன். அவர்கள் பார்க்க மட்டும் அழகானவர்கள் அல்ல. மனதளவிலும் நல்லவர்கள். அவர்களுடனான உறவை என்னால் நீடிக்க முடியவில்லை.
தோல்வியானதற்கு முழு பொறுப்பும் நான்தான். எனது தவறால்தான் அது நிலைக்காமல் போய்விட்டது. நான் ஒரு நல்ல கணவனாக இருக்க முடியாது. எனவேதான் திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.