Friday, June 3, 2011

வைகைப் புயல் மீது வழக்கு?


ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஆடிப் போய் இருக்கிறார் வைகைப் புயல். அடிமேல் அடி விழுந்து கொண்டேயிருக்கிறது. இந்த அலங்கோலத்துக்கு நடுவில் ஆபாச சாமியார் நித்திய ஆனந்தத்திடமிருந்து நோட்டீஸ் வந்திருக்கிறதாம் வைகைப் புயலுக்கு.
நமது காமெடியன் 32 வேடங்களில் உலகம் என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. அதில் ஒரு வேடம் ஆபாச சாமியாரை நினைவுப்படுத்தும் சாமியார் கெட்டப். ஆட்சி மாறிய பிறகு இந்த உலகம் சுழலவில்லை. அதாவது ஒரு வேடத்தில் நடிக்கவே முடியலை, இதில் 32 வேடமா என்று அவர்களே ஒதுங்கிவிட்டனர்.
முக்காலமும் அறிந்த ஞானப்பழம் நித்திக்கு இந்த விஷயம் தெ‌ரியவில்லை. 32 வேடங்களில் ஒரு வேடம் என்னதாமே… என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்துற மாதி‌ரி ஏதாவது இருந்தா அவ்வளவுதான் என்ற தொனியில் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாராம்.
களங்கத்தையும் களவாணித்தனத்தையும் பற்றி யார் பேசுறாங்க பாருங்க.

No comments:

Post a Comment