Wednesday, June 8, 2011

இந்தி நடிகை சரா கானின் ஆபாச படம் வெளியானததால் பரபரப்பு!



பாலிவுட்டின் வளரும் நடிகைகளில் சரா கானும் ஒருவர். மாஜி நாயகி சல்மா ஆகாவின் மகளான, இவரின் ஆபாச படங்கள் சிலதினங்களுக்கு முன்னர் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரா கான் போலீசில் புகார் செய்துள்ளார்.
1980களில் இந்தி படங்களில் நடித்தவர் சல்மா ஆகா. ஹீனா படத்தின் மூலம் பிரபலமான இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்தவரான சல்மா, மும்பையில் வசித்து வருகிறார். தற்போது படங்களில் நடிக்காவிட்டாலும் தனது மகள் சரா கானை நடிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இணையதளம் ஒன்றில் சரா கானின் ஆபாச படம் வெளியானது. இதைபார்த்த அதிர்ச்சியடைந்த சரா போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து சராவும், அவரது தாயார் சல்மா ஆகாவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது சரா கூறியதாவது, என்னுடைய படங்கள் சித்தரிக்கப்பட்டு ஆபாசமாகவும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி எனது நண்பர் ஒருவர் எனக்கு தகவல் தெரிவித்தார். இதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அது என்னுடைய படம் அல்ல. எனது பெயரை களங்கப்படுத்த யாரோ இதுபோன்ற செயலில் ‌ஈடுபட்டு இருக்கின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளேன். அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விரைவில் அந்த நபரை கைது செய்தவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment