Wednesday, June 8, 2011

“தூள்”, “சாமி” மாதிரி கதைகளில் நடிக்க ஆசை- விக்ரம்





“தெய்வத்திருமகன்” படத்தையடுத்து விக்ரம் “ராஜபாட்டை” என்ற படத்தில் நடிக்கிறார். சுசீந்திரன் இயக்குகிறார். பிரதீஷ், சந்தோஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இவர்கள் பிரபல பட அதிபர் ரமேஷ்பாபுவின் மகன்கள் ஆவர்.
ராஜபாட்டை படபூஜை வடபழனியில் நடந்தது. பின்னர் விக்ரம் அளித்த பேட்டி வருமாறு:-
ரொம்பநாளைக்கு பிறகு கமர்ஷியல் மசாலாவுடன் தயாராகும், ராஜபாட்டை படத்தில் நடிக்கிறேன். இந்த படம் மாறுபட்ட கதையம்சம் கொண்டது. தில், தூள், சாமி மாதிரி கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் இருந்தது. ராஜபாட்டை படத்தில் அது நிறைவேறியுள்ளது.திறமையான டெக்னீசியன்கள் இப்படத்தில் உள்ளனர். எனவே சிறப்பாக உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்படத்தில் கதாநாயகியாக தீக்ஷாசேத் நடிக்கிறார். இவர் பிரபல தெலுங்கு நடிகை. அவர் கூறும்போது விக்ரம் திறமையான நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நடிப்பு பற்றி விக்ரமிடம் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார்.
சுசீந்திரன் கூறும்போது, காமெடி கலந்த ஆக்ஷன் படமாக ராஜபாட்டை உருவாகிறது. சென்னையில் நடக்கும் கதை என்பதால் முழு படப்பிடிப்பும் இங்கேயே நடைபெறும் என்றார். நடிகர் தம்பிராமையா, ஒளிப்பதிவாளர் மதி ஆகியோர் பங்கேற்றனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர்ராஜா இசை அமைக்கிறார்.

No comments:

Post a Comment