Saturday, June 11, 2011

தீபிகாவுக்கு போலீஸ் பாதுகாப்பு; கடத்தப்படும் அபாயம்


deepika-raana-11-06-11
மும்பையில் உள்ள அபய்காந்தி என்ற பிரபல தாதா, தன்னுடைய அறையில் தீபிகா படுகோன் போட்டோவை ஒட்டி வைத்து அதற்கு கீழே வரும் ஜூலை 5ம் தேதிக்குள் இவரை திருமணம் செய்வேன் என்று எழுது வைத்துள்ளார். சமீபத்தில் தாதாக்களின் இருப்பிடங்களில் அதிரடி சோதனையை நடத்தியபோது போலீஸ் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுவாக ரசிகர்கள் தங்கள் அபிமான ஹீரோயின்களின் போட்டோக்களை தங்கள் அறைகளில் ஒட்டி வைப்பது வழக்கம்தான் என்றாலும், மும்மை தாதாவான அபய் இப்படி எழுதுவைத்திருப்பதால், தீபிகாவை கடத்தும் எண்ணத்தில் இருக்கலாம் என்று போலீச் சந்தேகப்படுகிறது. அதனால் தீபிகாவுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment