Wednesday, May 25, 2011

vadivel super hit


சித்தார்த்துடன் குடித்தனம்: ‘அது என் தனிப்பட்ட வாழ்க்கை’ – ஸ்ருதி ஹாஸன்

சித்தார்த்தை நான் காதலிக்கிறேனா, அவரும் நானும் ஒன்றாக வசிக்கிறோமா என்பது பற்றியெல்லாம் பொதுவில் விவாதிக்க நான் தயாராக இல்லை. இதைக் கேட்க யாருக்கும் உரிமையில்லை, என்று நடிகை ஸ்ருதிஹாஸன் கூறியுள்ளார்.
தெலுங்கில் அனகனகா ஓ தீருடு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதிஹாஸன்.
இந்தப் படம் மூலம் இருவருக்கும் மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, இப்போது இருவரும் ஹைதராபாதில் தனிக் குடித்தனம் நடத்துவதாக தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை இருவருமே மறுக்கவில்லை. மாறாக இதையெல்லாம் ஏன் கேட்கிறீ்கள்? அது என் தனிப்பட்ட வாழ்க்கை என்று கூறி வருகிறார் ஸ்ருதி.
இந்த நிலையில், நேற்று ஹைதராபாத்தில் ஸ்ருதியிடம் சித்தார்த் விவகாரம் பற்றிக் கேட்டனர்.
அதற்கு அவர், “மீண்டும் சொல்கிறேன், இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. என் சினிமா பற்றி கேளுங்கள். சந்தோஷமாக பதில் சொல்கிறேன். நானும் சித்தார்த்தும் காதலிப்பது, ஒன்றாக வசிப்பது பற்றியெல்லாம் உங்களுக்கு எதற்கு? இது முழுக்க முழுக்க தனிமனித வாழ்க்கை. அதனால் இதுபற்றிக் கேட்க வேண்டாம்,” என்றார்.

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

தேர்தல் முடிவு தெரிவதற்கு முன், ஒரு கருத்துக் கணிப்பை நம்பி ராணாவாவது காணாவாவது என வாய்க்கு வந்தபடி உளறிய வடிவேலுவுக்கு, அந்த ஒரு வார்த்தை எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அடுத்த நிமிடமே புரிந்துவிட்டது.
அடடா ஒரு ‘ஃப்ளோல’ சொல்லி மாட்டிக்கிட்டேனே என தவித்தவர், எப்படியாவது சூப்பர் ஸ்டாரைச் சந்தித்து தனது நிலைமையை விளக்கிச் சொல்லி மன்னிப்பும் கேட்டுவிடத் துடித்தார்.
ஆனால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது, ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டதால். அவர் இரண்டாம் முறை இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே நேரில் பார்க்க எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகு வீட்டுக்குத் திரும்பிய ரஜினியைப் பார்க்க பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தேர்தல் முடிவுக்குப் பிறகு மீண்டும் ராமச்சந்திராவில் ரஜினி சிகிச்சைக்குச் சேர்ந்துவிட, இந்த முறை எப்படியாவது அவரை சந்தித்து விட வேண்டும் என்ற முடிவில் சமீபத்தில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்துள்ளார் வடிவேலு. நல்லவேளை அங்கு பெரிய அளவு ரசிகர் கூட்டமில்லை.
நேராக உள்ளே போனவர், ரஜினியைப் பார்க்க அனுமதி கேட்க, நிர்வாகம் மறுத்துவிட்டது. நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடுவுக்குப் பிறகு, ரஜினியைப் பார்க்க யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. பல விஐபிக்கள் வாசலோடு நிறுத்தப்பட்டனர். லதா ரஜினியிடம் விசாரித்துவிட்டுச் சென்றனர். ஆனால் வடிவேலுவுக்கோ லதாவை சந்திக்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. போன வேகத்தில் தலையைத் தொங்கப்போட்டபடி திரும்பினாராம் வடிவேலு

Tuesday, May 24, 2011

அஜீத்தை இயக்க போட்டி போடும் ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஜே.சூர்யா!

அஜீத்தை வைத்து தங்களது திரையுலக பயணத்தை தொடங்கிய பிரபல டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்(தீனா), மற்றும் எஸ்.ஜே.சூர்யா(வாலி), மீண்டும் அஜீத்தை வைத்து ஒரு படத்தை இயக்க போட்டி போட்டு வருகின்றனர்.
அஜீத்தை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் தீனா படத்தையும், எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தையும் கொடுத்து தங்களது திரை பயணத்தை தொடங்கினார். இரண்டு படங்களுமே அஜீத்திற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டான படங்கள். அதிலும் குறிப்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தீனா படம் அஜீத்தை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியது. மேலும் அஜீத்தை தல என்று செல்லமாக அழைக்க வைத்ததும் தீனா படம் தான். முதல்படத்திலேயே ஒரு மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து பிரபல டைரக்டர்கள் வரிசையில் சேர்ந்தனர் எஸ்.ஜே.சூர்யாவும், ஏ.ஆர்.முருகதாஸூம்.
இந்நிலையில் மீண்டும் அஜீத்தை வைத்து ஒரு படம் இயக்க முருகதாஸ் மற்றும் எஸ்.‌ஜே.சூர்யாவும் கடுமையாக போட்டி போடுவதாக தெரிகிறது. இருவரும் ஒரு கதையை ரெடி பண்ணி அஜீத்திடம் காண்பித்துள்ளனர். அதில் முருகதாஸின் கதை பிடித்து போக அவருக்கு ஓ.கே., சொன்னதாக தெரிகிறது. அதேசமயம் எஸ்.ஜே.சூர்யாவையும் ஒதுக்காமல் தங்களுடைய படத்திலும் நடிப்பதாக கூறியிருக்கிறார் அஜீத். தற்போது அஜீத் மங்காத்தா படத்தின் இறுதிகட்ட சூட்டிங்கில் இருக்கிறார். அதனைத்தொடர்ந்து சக்ரி டோலட்டி இயக்கும் பில்லா-2வில் நடிக்கிறார். பில்லா-2விற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஜீத் நடிப்பார் எனத் தெரிகிறது

இசபெல் மருத்துவமனையில் ரஜினிகாந்த்: புகைப்படம் வெளியிட்டார் தனுஷ்

ரஜினி நலமுடன் உள்ளார் என்று எத்தனையோ முறை செய்தியாக வெளியிட்டும் கூட ரசிகர்களுக்கு ஒரு சின்ன உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. காரணம், அவரது திருமுகத்தை ஒருமுறையாவது புகைப்படமாக, வீடியோவாகப் பார்க்க வேண்டும் என்பதால்.
இந்த நிலையில் ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ், அவரைச் சந்தித்தபோது தனது மொபைலில் எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்தப் படம்தான் நீங்கள் இங்கே பார்ப்பது. மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கட்டை விரலை உயர்த்திக் காட்டி, நான் நலமுடன் இருக்கிறேன் என்று கூறுவது போல அவர் போஸ் கொடுத்துள்ளார்.
ரஜினி ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதால் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். இஸபெல் மருத்துவமனையில் இரண்டாம் முறை அவர் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் இது.
இருப்பினும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புதிய படங்களை விரைவில் தருவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்

மலையாளத்திலும் சோனியா அகர்வாலுக்கு அதிர்ஷடம்!

சினிமாவில் இரண்டாவது அத்யாயமான நடிகை சோனியா அகர்வாலுக்கு, கோலிவுட்டில் மட்டுமல்லாது மாலிவுட்டிலும் அதிர்ஷடம் அடித்திருக்கிறது. முதன்முறையாக மலையாள படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
டைரக்டர் செல்வராகவனின் காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமான சோனியா அகர்வால், அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்‌தோஷமாக சென்று கொண்டு இருந்த இவர்கள் வாழ்க்கையில் புயல் அடித்தது போல் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு செல்வா, கீதாஞ்சலி என்ற பெண்ணை காதலித்தார். இவர்களது திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. சோனியாவோ மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்ட ஆரம்பித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‌வானம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தாலும், இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. வானம் படத்தில் கிடைத்த வெற்றி அடுத்தடுத்து இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் தனது உடம்பையும் ஸ்லிமாக மாற்றி, பழைய சோனியா அகர்வால் போல சிக்கென்று தோற்றமளிக்கிறார்.
இந்நிலையில் மலையாள படத்திலும் நடிக்க சோனியா அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டைரக்டர் மோகன் குப்லேரி அடுத்து ஒரு படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக முகேஷூம், அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வாலும் நடிக்க இருக்கிறார். தற்போது தமிழ் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சோனியா, விரைவில் மாலையாள பட சூட்டிங்கிலும் கலந்து கொள்ள இருக்கிறார். மலையாள படத்தில் சோனியா அகர்வால் நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினி நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்தும் திரையுலகம்!

மருத்துவமனையில் உள்ள ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று வர சினிமா உலகினர் நாளை கூட்டுப் பிரார்த்தனை நடத்துகின்றனர்.
ஆவடியில் நடிகர் ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயிலில் இந்த கூட்டுப் பிரார்த்தனை நடக்கிறது. திரையுலகினரும் பொதுமக்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
ரஜினிகாந்த் மீது அபரிமிதமான அன்பும், பாசமும், மரியாதையும் கொண்டவர்கள் பல கோடி மக்கள். அவர்களில் நானும் ஒருவன்.
உடல் நலமில்லாமல் இருக்கும் ரஜினி நலம் பெற்று, என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜையுடன், கூட்டு பிரார்த்தனை ஏற்பாடு செய்திருக்கிறேன்.
“சூப்பர்ஸ்டாராக பல கோடி மக்களின் மனதில் இடம் பிடித்து பேரும் புகழுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்துக்கு உடல்நலமில்லை என்பதை அறிந்து துடிதுடித்துப்போய்விட்டேன்.
என்னை சினிமாவுக்கு கொண்டு வந்ததே சூப்பர் ஸ்டார்தான்.
அவரைப் போலவே தீவிர ராகவேந்திரர் பக்தனான நான், ராகவேந்திரருக்காக திருக்கோவில் கட்ட தீர்மானித்தபோது, சிலை வடிவமைக்க மாதிரி புகைப்படம் ஒன்றைக் கொடுத்து, இதுபோல் சிலை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவரது எண்ணப்படியே சிலையை வடித்து ஆவடியில் ராகவேந்திரருக்கு திருக்கோவிலை நிர்மாணித்தோம்.
ரஜினி எண்ணப்படி கட்டப்பட்ட ராகவேந்திரர் திருக்கோவிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை 22.05.2011 அன்று காலை 6.30 மணிக்கு, ரஜினி உடல்நலம் பெற வேண்டி, 108 குடம் பாலாபிஷேகம் செய்து, கூட்டுப்பிரார்த்தனை செய்ய இருக்கிறோம்.
ரஜினி உடல்நலத்துக்காக நடைபெற உள்ள இந்த கூட்டுப் பிரார்த்தனையில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். ரஜினி ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டு இந்த கூட்டுப் பிரார்த்தனை சிறப்பாக நடைபெற ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இதில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பிரார்த்தனை செய்யவும்.
கோடானுகோடி மக்களின் சார்பாக கடவுளின் முன் வைக்கப்படும் நம் கோரிக்கை ஏற்று நிச்சயம் கடவுள் அருள் புரிவார். ரஜினி விரைந்து நலம் பெறுவார்,” என்று தெரிவித்துள்ளார்.

விருது சர்ச்சை

மைதானம் படம் ஆறு விருதுகளை பெற்றிருப்பது பலருக்கு பொறுக்கவில்லை. மைதானத்தின் தயா‌ரிப்பு மத்திய அரசில் செல்வாக்கான ஆள் என்பதால் ஆள் பார்த்து கொடுத்திருக்கிறார்கள் என குமுறுகிறார்கள்.
மைதானத்தை வசைபாடுகிறவர்கள் அனைவரும் சொல்லி வைத்த மாதி‌ரி தெரு படத்தை முன்னிறுத்துகிறார்கள். விளிம்புநிலை மனிதர்களின் கதையை ரத்தமும் சதையுமாகச் சொன்னப் படத்துக்கு விருதே இல்லையா என மைதானத்தை கார்னர் செய்கின்றனர்.
படத்துல கண்ணீர் இருக்கு… கலை இல்லையே என கலாய்க்கிறது எதிர்தரப்பு.
விருது கொடுத்து வில்லங்கத்தை கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

அண்ணன் என்னடா தம்பி என்னடா

அண்ணன் இல்லாவிட்டால் நான் இல்லை என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார் சுள்ளான். விருது கிடைத்திருக்கும் இந்த நேரத்திலும் மேலே உள்ள டயலாக்கை அவர் ‌ரிப்பீட் செய்திருப்பது பலரை நெகிழ வைத்திருக்கிறது. ஆனா‌ல், இந்த நெகிழ்ச்சி எல்லாம் அவர்களுக்குள் இல்லை என காதை கடிக்கிறது அண்ணனின் செகண்ட் வேல்ட் யூனிட்.
இந்தப் படத்தின் நாயகியை அண்ணன் மாற்றியிருக்கிறார். இதனால் இதுவரை எடுத்த காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டும். இப்போதே ஏகப்பட்ட கால்ஷீட் வேஸ்ட். இதனால் படப்பிடிப்புக்கு அண்ணன் அழைக்க, அட போப்பா என்று கூறிவிட்டாராம் தம்பி. வளர்த்த கடா மா‌ரில் பாஞ்சுதே என்று அண்ணனும், எத்தனை காலம்தான் விசுவாசத்தை காட்டுறது என்று தம்பியும் இரு துருவங்களாக முறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினிக்காக கூடிய இயக்குநர்கள்



rajini-bharathiraja-24-05-11
ரஜினிகாந்த் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி தமிழ் திரையுலகின் இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் இயக்குனர் சங்க தலைவர் பாரதிராஜா தலைமையில் கூடி கூட்டுப்பிரார்த்தனை செய்தார்கள்.

சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் பாரதிராஜா தலைமயில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, சேரன், சீனு ராமசாமி, வெற்றி மாறன், எழில், பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், வசந்த்,  எஸ்.பி.ஜனநாதன், பேரரசு, அகத்தியன், ஆர்.வி.உதயகுமார், உள்ளிட்ட‌ 500 இயக்குநர்களும், 1000 உதவி இயக்குநர்களும், செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டம் முடிந்தவுடன் இயக்குனர் சங்க செயலாலர் செல்வமணி "ரஜின்காந்த் உடல் நலம் பெறவேண்டி நாம் அனைவரும் எழுந்து நின்று கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்" என்று கூறினார். உடனே அனைவரும் எழுந்து நின்று பிரார்த்தனை செய்தார்கள்.


தமிழ் திரையுலகம் சங்கமிக்கப்போகும் விழா!



radha-ravi-hari-radha-ravi-24-05-11
வில்லன் நடிகர் ராதாரவியின் மனக் ஹரி ராதாரவியின் திருமணம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி நடிகர் சங்க பொதுச் செயலாளர், நடிகர் ராதாரவியின் மகன் ஹரி ராதா ரவிக்கு வரும் ஜூன் 5-ம் தேதி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடக்கிறது. மணமகன் ஹரி பி.காம் படித்திருக்கிறார். விரைவில் வெளிவரவிருக்கும் 'திருமந்திரம்' என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மணப்பெண் பெங்களூரைச் சேர்ந்த திவ்யா என்ற மகாலட்சுமியை ஆவார்.

ஜுன் 4ம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ராதா ரவி நடிகர் சங்க பொதுச்செயலாலராக இருப்பதால், தமிழ் திரையுலகைச் சார்ந்த அனைத்து வி.ஐ.பி களுக் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ் திரையுலகம் சங்கமிக்கப்போகும் விழா!



radha-ravi-hari-radha-ravi-24-05-11
வில்லன் நடிகர் ராதாரவியின் மனக் ஹரி ராதாரவியின் திருமணம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி நடிகர் சங்க பொதுச் செயலாளர், நடிகர் ராதாரவியின் மகன் ஹரி ராதா ரவிக்கு வரும் ஜூன் 5-ம் தேதி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடக்கிறது. மணமகன் ஹரி பி.காம் படித்திருக்கிறார். விரைவில் வெளிவரவிருக்கும் 'திருமந்திரம்' என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மணப்பெண் பெங்களூரைச் சேர்ந்த திவ்யா என்ற மகாலட்சுமியை ஆவார்.

ஜுன் 4ம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ராதா ரவி நடிகர் சங்க பொதுச்செயலாலராக இருப்பதால், தமிழ் திரையுலகைச் சார்ந்த அனைத்து வி.ஐ.பி களுக் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


"நான் யாருக்கும் பயப்படதேவையில்லை", மீரா ஜாஸ்மின்


meera-jasmine-mandolin-rajesh-24-05-11
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகை மீரா ஜாஸ்மின். இவர் நீண்ட நாட்களாக மாண்டலின் இசை கலைஞரான மாண்டலின் ராஜேஸை காதலிந்த்து வருவகிறார்கள். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாக கூறப்படுகிறது. மீரா ஜாஸ்மின் புதிய படங்கள் எதுவும் ஒத்துக்கொள்ளாதிருப்பது, இவர்களின் திருமணத்தை உறுதி செய்வதாக உள்ளது.

சமீபத்தில் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' நடத்திய நிகழ்ச்சியில், மீரா கலந்து கொள்ளவில்லை. இது பற்றி கேட்டபோது "நான் யாருக்கும், எந்த சங்கத்திற்கும் பயப்பட தேவையில்லை, ஏனென்றால் நான் நடிக்கப்போவதே இல்லை" என்று கூறியிருக்கிறார்.

Monday, May 23, 2011

அஜீத்தின் 'பில்லா-2' ஷூட்டிங் தூத்துக்குடியில் !



அஜீத்தின் \'பில்லா-2\'  ஷூட்டிங் மே மாதத்தில் தூத்துக்குடியில் துவங்குகிறது. பில்லா-2 படத்தின் ஒளிப்பதிவாளராக ஹேமந்த் சதுர்வேதி ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் இந்தி திரைப்பட உலகில் பெரிதும் பாராட்டப்படும் ஒளிப்பதிவாளர்.  \'மக்தி\' , ராம் கோபால் வர்மாவின் \' கம்பெனி\' , கரீனா கபூர் நடித்த \'குர்பான்\' போன்ற படங்களில் இவரது ஒளிப்பதிவு பெரிதும் பேசப்பட்டது. 

\'பில்லா\' படத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அப்படத்தில் அஜீத்தை மிகவும் ஸ்டைலாக காட்டியதாக அவரது ரசிகர்கள்
சந்தோஷப்பட்டனர். இந்நிலையில் அப்படத்தின் அடுத்த பாகமான \'பில்லா-2\'வில் நீரவ் ஷா பணிபுரிவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீரவ் ஷா கைவசம் இப்போது பல படங்கள் இருப்பதால் பில்லா-2வில் பணியாற்ற இயலவில்லை. 

இந்நிலையில் படத்தை இயக்க, \'உன்னைப்போல் ஒருவன்\' படத்தின் இயக்குனர் சக்ரியும், ஒளிப்பதிவாளராக ஹேமந்த் சதுர்வேதியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

\'பில்லா\' வைப் போலவே \'பில்லா-2\'வும் வெற்றி பெரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்

வேட்டையாட துவக்கினார் சிம்பு ! ஜேம்ஸ் பாண்டுக்கு சவால்

\"வானம்\" படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்து நடிக்கும் படம் \"வேட்டை மன்னன்\". ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இப்படத்தின் சூட்டிங் சென்னையில் இன்று(06.04.11) துவங்கியது.

நிக் ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். புதுமுகம் நெல்சன் இப்படத்தை இயக்குகிறார்.

படத்தில் சிம்புவுடன் ‌பாலிவுட் நடிகை ஒருவர் சேர்ந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் சிம்புவுடன் சேர்ந்து சுப்ரமணியபுரம் ஜெய் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் சந்தானமும் நடிக்க இருக்கிறார்.

சிம்புவின் ஆஸ்தான இசையமைப்பாளரும், நெருங்கிய நண்பருமான யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார். ஜேம்ஸ் பாண்ட் போன்று ஹாலிட் படங்களுக்கு நிகராக வேட்டை மன்னன் படம் இருக்கும்

Sunday, May 22, 2011

7 ஆம் அறிவு படத்தில் மாற்றம் செய்யும் முருகதாஸ்!


suriya-murugadass-18-05-11
வித்தியாசமான கதைக்களம், வித்தியாசமான கெட்டப், வித்தியாசமான காட்சி அமைப்புகள் என்று எல்லாவற்றிலும் புதுமையுடன் தயாராகி வருகிறது முருகதாஸின் 7ஆம் அறிவு.

இப்படத்திற்காக பலநாட்களாக தன் மனதில் பட்டை தீட்டி உருவாக்கி வைத்திருந்த சில காட்சிகள் பற்றிய விபரங்கள் வெளியாகி விட்டதால், அந்தக் காட்சிகளை மறுபடியும் வேறு விதமாக தயார் செய்து ரீஷூட் செய்யப் போகிறார் முருகதாஸ். வேறு காட்சிகளை தயார் செய்து விட்டாலும் முருகதாஸ் மற்றும் சூர்யாவுக்கு சில சிறப்பான காட்சிகளை மிஸ் செய்வதில் மிக வருத்தம் என்கிறது 7 ஆம் அறிவு பட வட்டாரம்.


முந்துகிறது பில்லா 2


ajith-vishnu-vardhan-20-05-11
மங்காத்தா படத்திற்க்குப்பிறகு பில்லா 2 வில் அஜீத் நடிக்கப்போவதாகவும் அதை விஷ்ணுவர்தன் இயக்கப்போவதாகவும் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் பில்லா 2 லிருந்து விஷ்ணுவர்தன் விலகினார். அவருக்கு பதிலாக உன்னைப்போல் ஒருவன் படத்தின் இயக்குனர் சக்ரி பில்லா 2 படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் சில வாரங்களுக்கு முன் பில்லா 2 வை தள்ளி வைத்து விட்டு ஜெயம் ராஜாவின் படத்தில் முதலில் நடிக்கலாம் என்று அஜீத் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாயின, அது உண்மையும் கூட என்று சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது அஜீத்தின் முடிவில் மறுபடியும் மாற்றம் ஆம் பில்லா 2 வை முதலில் முடித்து விட்டு மற்றவைகளை பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல்


சென்னையை கலக்கிய அஜீத்

ajith-venkat-prabhu-20-05-11
இன்று சென்னை சிட்டி முழுவதும், மங்காத்தா பாடல் வெளியீட்டுக்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள், மக்களை கவரும் விதமாக இருந்தது.
இதுவரை வெளிவராத மங்காத்தா ஸ்டில்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டிருந்தது, கடந்து செல்லும் யாவரையும் ஒரு கணம் திரும்பி பார்க்க வைப்பதாக இருந்தது. அதிலும் முக்கியமாக போலீஸ் கெட்டப்பில் அஜீத் இருக்கும் ஒரு போஸ்டரை, பலரும் தங்கள் செல்போனில் படம்பிடித்துச் சென்றது சென்னை முழுவதும் பரவலாக நடந்தது.


விஷால் பிரபுதேவா மோதலா?

vishal-prabhu-deva-18-05-11-02
விஷால் பிரபுதேவா இடையே மனவருத்தம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. பிரபுதேவாவின் 'எங்கேயும் காதல்' படம் சரியாக போகவில்லை என்பதாலும், தற்போது இயக்கிவரும் விஷால் படத்திவிட அடுத்து இயக்கப்போகும் ஹிந்தி படத்தில் பிரபுதேவா அதிக கவனம் செலுத்துகிறார் என்பதாலும், விஷாலுக்கும் பிரபுதேவாவுக்கும் மன வருத்தம் என்று சொல்லப்படுகிறது.

இது பற்றி பிரபுதேவா  இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஆனால் இது பற்றி சொல்லி இருக்கும் விஷால் "இதே போல் எத்தனை கட்டுக்கதைகள் வெளிவருமோ தெரியவில்லை? இதற்கு முன் 'அவன் இவன்' படத்தில் ஆர்யாவுடன் மோதல், பாலாவுடன் கருத்து வேறுபாடு என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் அதெல்லாம் பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. அதே போல் இதுவும் பொய் என்பது விரைவில் தெரியவரும்", என்று தெரிவித்திருக்கிறார்.

இளம் வயதில் மிகப் பெரிய பேர் பெற்ற தனுஷ்!

dhanush-rajini-20-05-11-02
இன்று அறிவிக்கப்பட்டுள தேசிய விருதுகளில் சிறந்த நடிகர் விருதுக்காக‌ தனுஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக இவ்விருது வழங்கப்படவிருக்கிறது.

இப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் சிறந்த இயக்குனர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, நடனம் , சிறந்த படம் என 6 தேசிய விருதுகளை ஆடுகளம் அள்ளியுள்ளது.

Saturday, May 21, 2011

ரஜினி பற்றிய வதந்தியால் ரசிகர் தற்கொலை!




ரஜினி பற்றிய வதந்தி காரணமாக மனமுடைந்த ரசிகர் ஒருவர் நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
உலகில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத அளவுக்கு ரசிகர் மன்றங்களையும் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களையும் கொண்டவர் ரஜினி.
தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். உலகில் தமிழர் வசிக்கும் நாடுகளிலெல்லாம் அவருக்கு ரசிகர்கள் உண்டு. ஜப்பான், கொரியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்களிலும் ரஜினி ரசிகர்கள் உள்ளனர்.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கிவிட்டனர். அவரைப் பற்றி மாற்றி மாற்றி வரும் செய்திகள் மற்றும் வதந்திகள் காரணமாக ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ரஜினி குறித்த வதந்தியால் கலக்கமடைந்த ரசிகர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்துக்கோட்டை அருகே பால்ரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி வெங்கடேசன் (29). அந்த பகுதி ரஜினிமன்ற கிளை செயலாளராக இருந்தார். ரஜினி உடல்நிலை பற்றி வந்த வதந்தியால் வேதனையில் இருந்தார்.
இந்நிலையில், நண்பர் ராஜேசுக்கு நேற்று மாலை செல்போனில் பேசிய வெங்கடேசன், “தலைவர் ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் என்னால் தாங்கமுடியாது. எனவே, சாகப்போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
அதற்கு நண்பர், “கவலைப்படாதே, தலைவர் ரஜினி உடல் நலம் தேறி வந்துவிடுவார்” என்று ஆறுதல் கூறியிருக்கிறார். இதன்பிறகு அவரது செல்போனுக்கு நண்பர் பேசியபோது செயல்படவில்லை.
இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் வெங்கடேசன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாதாரண நிலைக்குத் திரும்பினார் ரஜினி! – மருத்துவமனை அறிவிப்பு




சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. அவர் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த 13-ந்தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி.
முழுமையான பரிசோதனைக்குப் பின் அவரை தீவிர சிகிச்சை பிரிவுவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சுவாசப் பிரச்சினை, சிறுநீரகப் பிரச்சினை போன்றவற்றுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, ரஜினி சாதாரண நிலைக்கு திரும்பிவிட்டார் என்று ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
வழக்கமான உணவு உண்டு குடும்பத்தாரோடு ரஜினி மகிழ்ச்சியாக இருப்பதாக, இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் வீடு திரும்புவார் என்று தெரிகிறது.

இந்தி நடிகர் நிதின் முகேசுடன் அசின் காதல்?




பிரபல இந்தி நடிகர் நிதின் முகேஷ்வுடன் அசின் காதல் வயப்பட்டுள்ளதாக மும்பை பட உலகில் கிசு கிசுக்கள் பரவி உள்ளது. அங்குள்ள பத்திரிகைகளில் இச்செய்தி வெளி வந்துள்ளது. இந்தி கஜினி மூலம் அசின் மும்பை சென்றார். அது ஹிட்டானதால் ஒரு படத்திலேயே உலகெங்கும் பிரபல மானார்.
லண்டன் டீரிம்ஸ் படத்தில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். ரெடி படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். சல்மானையும் அசினையும் இணைத்து வதந்திகள் பரவியது. இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது. இருவரும் அதை மறுத்தனர்.
இந்த நிலையில் நிதின் முகேசை காதலிப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அசினுக்காக தயாரிப்பாளர்களிடம் நிதின் வாய்ப்பு கேட்பதாக கூறப்படுகிறது. தனது படங்களில் அவரை ஜோடியாக்கவும் நிர்ப்பந்திக்கிறாராம். ஆனால் இது வெறும் வதந்திதான் என்று நிதின் மறுத்தார். நட்பாக பழகினாலே காதல் என கதை கட்டி விடுகின்றனர் என்றார்.

நடிகர் செந்தில் மருத்துவமனையில் அனுமதி!



உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை 200க்கும் அதிகமான படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்திருப்பவர் நடிகர் செந்தில்.
இன்னொரு காமெடி நடிகரான கவுண்டமணியுடன், செந்தில் நடித்த காமெடி காட்சிகள் காலாகாலத்துக்கும் சிரித்து ரசிக்கும் வகையில் இருக்கிறது. சினிமாவில் வாய்ப்பு குறைய ஆரம்பித்தது முதல் அதிமுகவில் இணைந்து அதிமுகவுக்கு ஆதரவான பிரசாரங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று வரும் செந்தில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் செந்திலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூல நோயால் அவதிப்பட்ட அவரை உடனடியாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு செந்திலின் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், ஆபரேஷசன் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. தற்போது நடிகர் செந்தில் நலமுடன் இருப்பதாகவும், ஒரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


“மங்காத்தா” பாடல் இன்று வெளியீடு; சி.டி.கடைகளில் திரண்ட அஜீத் ரசிகர்கள்




அஜீத்தின் 50-வது படம் மங்காத்தா. திரிஷா ஜோடியாக நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்தது. தற்போது ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது.
இதற்கிடையில் மங்காத்தா படத்தில் இடம் பெற்ற “விளையாடு மங்காத்தா” என்று துவங்கும் பாடல் சி.டி. இன்று வெளியானது. இந்த ஒரு பாடல் மட்டும் சி.டி.யில் இடம் பெற்றுள்ளது.இப்பாடல் சி.டி.க்களை வாங்க கடைகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
பாடல் வெளியீடு பற்றி அஜீத் கூறும்போது, வெங்கட் பிரபு திறமையான இயக்குனர். இப்படத்தில் நடிப்பது சந்தோஷமான அனுபவம். யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏற்கனவே எனது பில்லா, தீனா படங்களுக்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நல்ல வரவேற்பு இருந்தது. மங்காத்தா பாடலும் நன்றாக வந்துள்ளது என்றார்.

நடிப்பிற்கு மீரா ஜாஸ்மின் முழுக்கு!


தொடர் படங்களின் தோல்வி மற்றும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் நடிகை மீரா ஜாஸ்மின், நடிப்பிற்கு முழுக்கு போடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். முதல் படத்தில் அவருக்கு கிடைத்த வெற்றி தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் விஜய், அஜீத், மாதவன், விஷால் உள்ளிட்டவர்களுடன் ஜோடி போட்டு நடித்த விட்ட மீரா ஜாஸ்மினுக்கு, சமீபத்திய படங்கள் அனைத்தும் ஊத்திக் கொண்டது. தமிழில் கடைசியாக விஷாலுடன் நடித்த சண்டைக்கோழி படம் தான் இவருக்கு சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு நடித்த படங்கள் எதுவும் சொல்லும்படியாக இல்லை. தமிழில் தான் இப்படி என்றால், மலையாள படங்களும் அவருக்கு தோல்வி படங்களாக அமைந்தது. இப்படி படங்கள் அனைத்தும் தொடர் தோல்வி அடைவதால் நடிப்பிற்கு முழுக்கு போடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் மீரா ஜாஸ்மின்.
இதனிடையே மீரா, நடிப்பிற்கு முழுக்கு போட தொடர் படங்களின் தோல்வி மட்டும் காரணமல்ல, விரைவில் அவர் தன்னுடைய நீண்டகால நண்பரை திருமணம் செய்ய இருப்பதால் நடிப்பிற்கு முழுக்கு போட இருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.


தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்



58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார்.
அதேபோல தென் மேற்குப் பருவக் காற்று படத்தில் சிறப்பாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன், மராத்தி நடிகை மித்தாலியுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார்.
58வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன.
சிறந்த நடிகர் தனுஷ்
அதன்படி ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை அவர் நடிகர் சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து பெறுகிறார்.
சிறந்த நடிகை சரண்யா
இதேபோல சிறந்த நடிகைக்கான விருது சரண்யாவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இவர் மித்தாலி என்ற மராத்தி நடிகையுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.
சிறந்த இயக்குநர் வெற்றி மாறன்
சிறந்த இயக்குநருக்கான விருது வெற்றி மாறனுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான தங்கத் தாமரை விருதை அவர் பெறுகிறார்.
சிறந்த திரைக்கதை – வெற்றி மாறன்
சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வெற்றி மாறனே தட்டிச் சென்றுள்ளார்.
சிறந்த துணை நடிகர் தம்பி ராமையா
சிறந்த துணை நடிகருக்கான விருது தம்பி ராமையாவுக்குக் கிடைத்துள்ளது. காமெடியனாக, இயக்குநராக அறியப்பட்ட தம்பி ராமையா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த படம் மைனா. இந்தப் படத்துக்காக தம்பி ராமையா, சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.
சிறந்த துணை நடிகை சுகுமாரி
சிறந்த துணை நடிகை விருது சுகுமாரிக்குக் கிடைத்துள்ளது. நம் கிராமம் என்ற படத்துக்காக அவர் இதைப் பெறுகிறார்.
சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து
சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவரைத் தேடி வந்துள்ளது.
சிறந்த தமிழ்ப் படம்
தமிழில் சிறந்த படமாக தென் மேற்குப் பருவக் காற்று திரைப்படம் தேர்வாகியுள்ளது.
சிறந்த நடன அமைப்பு திணேஷ்
ஆடுகளம் படத்தில் நடன வடிவமைப்பு செய்திருந்த திணேஷுக்கு சிறந்த நடன அமைப்புக்கான விருது கிடைத்துள்ளது.
எந்திரனுக்கு 2 விருதுகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.
சிறப்பு ஸ்பெஷல் எபக்ட்ஸுக்காக ஸ்ரீனிவாஸ்மோகன் விருது பெறுகிறார்.
சிறந்த கலை-தயாரிப்பு வடிவமைப்புக்காக சாபு சிரில் விருது பெறுகிறார்.
ஆடுகளத்திற்கு 6 விருதுகள்
ஆடுகளம் மொத்தம் ஆறு விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது.
சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடன வடிவமைப்பு, சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருது ஆகியவை ஆடுகளம் படத்துக்குக் கிடைத்துள்ளது.
அதேபோல சிறந்த எடிட்டிங்குக்கான விருதும் ஆடுகளம் படத்திற்காக கிஷோருக்குக் கிடைத்துள்ளது.
ஈழக் கவிஞருக்கு சிறப்பு விருது
ஆடுகளத்தில் தனுஷின் குருவாக நடித்தவரான ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் ஜெயபாலனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிப்பு





உடல் நலக்குறைவு காரணமாக ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தை இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.
ரஜினிகாந்த் மூச்சுத் திணறல், நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக கடந்த 13-ம் தேதி போரூர் ஸ்ரீராமசந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால் தற்போது டயாலிசிஸ் செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா பதவேற்பு விழாவுக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ரஜினியை சந்தி்த்து உடல் நலம் பற்றி விசாரித்தனர்.
இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார்.

எதி‌ரிகளை பந்தாடும் விஜயகாந்த்





எதிர்க்கட்சி தலைவரானதால் விஜயகாந்த் படங்களில் நடிக்க மாட்டார்… இந்த செய்தி கேட்டு விஜயாந்தின் ரசிகர்களுக்கு மிகப் பெ‌ரிய வருத்தம். அந்த வருத்தத்தை விஜயகாந்தே போக்கியிருக்கிறார்.
தொடர்ந்து சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த விஜயகாந்த், சினிமாதான் என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. மேலும் சினிமாதான் என்னுடைய தொழில். அதனால் சினிமாவில் நடிப்பதை ஒருபோதும் விடமாட்டேன், மக்கள் பணி பாதிக்கப்படாமல் சினிமாவில் நடிப்பேன் என தெ‌ரிவித்துள்ளார்.
எதி‌ரிகளும், தீவிரவாதிகளும் உஷார்.

தீவிர சிகிச்சை பி‌ரிவில் ர‌ஜினி

 

ரசிகர்களுக்கும், உறவினர்களுக்கும் கவலை தரும் செய்தி… மீண்டும் தீவிர சிகிச்சை பி‌ரிவில் ர‌ஜினி.
ர‌ஜினியின் உடல்நிலை குறித்து தினம் பல தகவல்கள். எது உண்மை என்பதை அறிந்து கொள்ளும் முயற்சியில் அவரது நலம் விரும்பிகள் திணறிப் போகிறார்கள். வைரமுத்து போன்றவர்களின் கவலைப்படாதீர்கள் அறிக்கையையும் மீறி எங்கும் கவலையின் ரேகைகள்.
இந்நிலையில் நேற்று ர‌ஜினியை தீவிர சிகிச்சை பி‌ரிவுக்கு மாற்றியிருக்கிறார்கள். ரசிகர்களின் பிரார்த்தனையும், மருத்துவர்களின் கவனிப்பும் ர‌ஜினியை விரைவிலேயே சகஜ நிலைக்கு கொண்டு வரும் என நம்புவோம்.

புஸ்வாணமாகும் புயல்

 காமெடிப் புயலை புஸ்வாணமாக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஐந்து வருடங்களுக்கு சினிமாவிலிருந்தே துரத்தியடிக்கும் வேலைகள்தான் எதி‌ரிகளின் இப்போதைய புராஜெக்ட்.
புயலுக்கு இப்போது படங்களில்லை. இதனை எப்போதுமே படங்களில்லை என்று மாற்றியமைக்க தீவிரமாக செயல்படுகிறார்கள் ஆளும் கட்சி அனுதாபிகள். புயலை ஒப்பந்தம் செய்தால் அவ்வளவுதான் என வாய்மொழியாக அனைவரும் எச்ச‌ரிக்கப்பட்டுள்ளனர். எதற்கு வம்பு என்று யாரும் இதனை எதிர்த்து வாய் திறக்கவில்லை.
ஐந்து வருடங்களுக்கு புயலை சினிமாவில் பார்க்க முடியாது என்பதுதான் இப்போதைய நிலை.

சதை போடுங்கள் என்றேன்: ரஜினியிடம் உடல் எடையை குறைக்க சொல்லவில்லை; டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு



ரஜினி உடல் எடையை குறைத்ததால் தான் உடல் நலக்குறைவுக்கு ஆளானார் என்று செய்திகள் பரவியுள்ளது. கடந்த ஓரிரு மாதங்களாகவே ராணா படத்துக்காக தன்னை தயார்படுத்தி வந்தார். திரவ உணவுகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடல் எடை குறைந்தது. உணவு பழக்கத்தை மாற்றியது உடலுக்கு ஒத்துக்கொள்ள வில்லை. எனவே தான் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ராணா பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
ராணா சரித்திர படம். இதில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார். சரித்திரப் படத்தில் மாவீரனாக தோன்ற உடலை யாராவது குறைப்பார்களா? ரஜினி என்றைக்கு குண்டாக இருந்திருக்கிறார். இப்போது இளைக்கச் சொல்வதற்கு நாங்கள் என்ன சரித்திர காமெடி படமா எடுக்கிறோம். அவரை ஒல்லி மாவீரனாக காட்ட? ரஜினி கதை டிஸ்கஷனுக்கு வரும் போதெல்லாம் இன்னும் கொஞ்சம் சதை போடுங்கள் என்று தான் சொல்லிக் கொண்டு இருந்தோம். உடல் எடையை குறைக்க சொல்லவில்லை.
ரஜினிக்கு இறைப்பையில் ஏற்பட்ட சிறு பிரச்சினை மற்றும் சுவாசக் கோளாறு காரணமாகத்தான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைசிறந்த மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருகிறது. நாளுக்கு நாள் அவரது உடல் நிலை நன்றாக தேறி வருகிறது. ஆஸ்பத்திரியில் ரஜினியை சந்திக்க நிறைய பேர் விரும்புகிறார்கள்.
எல்லோரையும் அனுமதித்தால் ஓய்வு எடுக்க முடியாது. எனவே தான் சில நாட்கள் கழித்து பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று இருக்கிறார்கள். ரசிகர்கள் வீண்வதந்திகளை நம்ப வேண்டாம். இன்னும் சில நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து விட்டு வீடு திரும்புவார்கள். நாம் எல்லோரது பிரார்த்தனையும் நம்பிக்கையும் வீண் போகாது.
இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.

ரஜினிக்காக தீபிகா படுகோன் பிரார்த்தனை


ரஜினி விரைவில் உடல் நலம் பெற்று வரவேண்டும், மீண்டும் ராணாவில் நடிக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கும் படம், ராணா. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.
படப்பிடிப்பு தொடக்க விழா, சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் கடந்த மாதம் 29ந் தேதி நடந்தது. அதில் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள். படப்பிடிப்பு தொடக்க விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் அன்று பிற்பகல் வீடு திரும்பினார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 9ந் தேதி வரை அவர் அங்கு சிகிச்சை பெற்றார்.
கடந்த 13ந் தேதி மாலை அவர் சென்னையை அடுத்த போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல்நலக்குறைவு காரணமாக, ‘ராணா’ படம் நிறுத்தப்பட்டுவிட்டதாக வதந்திகள் பரவின. அந்த வதந்திகளை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மறுத்தார். ரஜினிகாந்த் குணம் அடைந்து வீடு திரும்பியபின், சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டபின், ராணா படப்பிடிப்பு தொடரும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோன் அளித்துள்ள பேட்டியில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ராணா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தொடக்க விழா அன்றுதான் அவரை முதன்முதலாக நேரில் பார்த்தேன்.
எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு எங்கிருந்து இவ்வளவு சக்தி கிடைக்கிறது? என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அன்று அவர் உடல்நலக்குறைவாக இருந்தார்.
ரஜினி சாருடன் சேர்ந்து நான் இன்னும் நடிக்கவில்லை. அந்த நாளை நான் மிகுந்த பரவசத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் விரைவில் பூரண உடல்நலம் பெற்று, ராணா படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறேன்,” என்றார்.

தடம் மாறும் தமிழ் சினிமா! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்





முன்பெல்லாம், ஒரு நடிகர் நடிக்கும் படத்தில், இன்னொரு நடிகரும் நடிக்க வேண்டி இருந்தால் அல்லது இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என்று இயக்குநர் கதை ‌சொன்னால் முதலில் ஹீரோக்கள் மனசுக்குள் கேட்பது, நமக்கு பாட்டு இருக்குமா, டூயட் வருமா, பைட் இருக்குமா, எத்தனை சீன் நமக்கு வரும்.
அவருக்கு எத்தனை சீன், வெயிட் ரோல் யாருக்கு இப்படி மண்டை குடைய கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் பாலிவுட்டில் சத்தம் இல்லாமல் பெரிய நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்த படங்கள் பெரும் வெற்றியடைந்திருக்கிறது. உதாரணத்திற்கு ஹிருத்திக், அபிஷேக் நடித்த “தூம்-2″, அமீர்கான், மாதவன், சர்மான் ஜோஷி நடித்த “3-இடியட்ஸ்”, சல்மான் கான், சஞ்சய் தத் நடித்த “சாஜன்” என்று சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது இந்த பாணி தமிழ் சினிமாவிலும் தொடர்கிறது.
சமீபத்தில் வெளிவந்த, வெளிவர இருக்கும் படங்களில் இதை காணலாம். ஆர்யா நடித்த “பாஸ் என்ற பாஸ்கரன்” படத்தில் ஜீவா கெஸ்ட் ரோலில் நடித்தார். “கோ” படத்தில் ஜீவாவுடன் அஜ்மலும், ஒரு பாட்டில் கார்த்தி, ஜெயம் ரவி, தமன்னா, அதர்வா என்று பெரிய நட்சத்திரங்களும் பங்கேற்றன. தற்போது வெளிவந்த “வானம்” திரைப்படத்தில் சிம்புவும், பரத்தும் நடித்திருந்தனர். இதுதவிர விரைவில் வெளிவர இருக்கும் “அவன் இவன்” படத்தில் ஆர்யா-விஷால் சேர்ந்து நடித்திருக்கின்றனர். “வந்தான் வென்றான்” படத்தில் ஜீவாவுடன், நந்தா முக்கிய ‌ரோலில் நடித்திருக்கிறார். ஷங்கரின் “நண்பன்” (3-இடியட்ஸ் ரீ-மேக்) படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் நடித்துள்ளனர். சிம்பு நடிக்கும் “ஒஸ்தி” படத்தில் சிம்புவின் பிரதர் ரோலில் ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார். அதேபோல் லிங்குசாமியின் “வேட்டை” படத்தில் ஆர்யாவுடன் மாதவனும், ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்கும் புதிய படத்தில் சுப்ரமணியபுரம் ஜெய், விமல் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படியாக தமிழ் சினிமா ஒரு ஆ‌ராக்கியமான பாதையை நோக்கி, நடிகர்களுக்குள் ஒரு நட்புறவை வளர்க்கும் விதமாக செல்கிறது. இனி புதிய களங்களோடும், புதிய கதைகளோடும் இன்னும் வளரும் தமிழ் சினிமா!

Thursday, May 19, 2011

ஹீரோவாக களமிறங்குகிறார் கஞ்சா கருப்பு!

கஞ்சா கருப்புக்கு குழந்தை பிறந்த நேரம், அவரை ஹீரோவாக மாற்றி இருக்கிறது. இதுவரை காமடியனாக நடித்து வந்த கஞ்சா கருப்பு, முதன்முறையாக “மன்னார் வளைகுடா” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்குகிறார்.
பாலாவின் “பிதாமகன்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் கஞ்சா கருப்பு. ‌அதனைத்தொடர்ந்து அமீரின் “ராம்” படத்தின் மூலம் பிரபலமான அவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் காமடியனாக நடித்துள்ளார். இதுவரை காமடியனாக நடித்து வந்த கஞ்சா கருப்பு முதன்முறையாக ஹீரோவாக அவதரிக்க இருக்கிறார். டைரக்டர் மாதேஷிடம் “அரசாங்கம்”, “தில்லு முல்லு” போன்ற படங்களில் உதவியாளராக பணிபுரிந்த தனசேகரன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். “மன்னார் வளைகுடா” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், கஞ்சா கருப்புக்கு மூன்று ஹீரோயின்களாம், அதுவும் புதுமுகங்களாம். மீனவர் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் மீனவராக நடிக்கிறார் கஞ்சா கருப்பு.
இப்படம் குறித்து டைரக்டர் தனசேகரன் கூறியதாவது, மன்னார் வளைகுடா படம், மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது. சாதாரண மனிதன் ஒருவர் கோபப்பட்டால் என்ன ஆகும் என்பதே படத்தின் கதை. இப்படத்தின் கதை சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கற்பனையாக எடுக்கப்பட இருக்கிறது. முதன்முறையாக இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் கஞ்சா கருப்பு. படத்தில் அவர் மீனவராக வருகிறார். படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை கஞ்சா கருப்பு தான் தோன்றுவார். படத்தில் அவருக்கு மூன்று கதாநாயகிகள். மூன்று பேரும் புதுமுகங்கள் தான். படத்தில் பாடல்கள் உண்டு, ஆனால் டூயட் காட்சிகள் கிடையாது. தனி மனித வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சற்று காமெடியாவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லும் படமாக “மன்னாள் வளைகுடா” படம் இருக்கும். விரைவில் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரா‌மேஸ்வரத்திலும், சில காட்சிகளும் திருச்சியிலும் எடுக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலதிபரை காதலிக்கிறார் திவ்யா ஸ்பந்தனா!

வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபர் ரபேல் என்பவரை நடிகை திவ்யா ஸ்பந்தனா காதலிப்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் இருவரும் பெங்களூரில் நடந்த ஐ.பி.எல்., போட்டியை ஒன்றாக கண்டு மகிழ்ந்துள்ளனர்.
குத்து, கிரி, வாரணம் ஆயிரம், சிங்கம் புலி ‌உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா என்ற ரம்யா. மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியான இவர் தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான், கன்னட தயாரிப்பாளர்களுடன் மோதலில் ஈடுபட்டு, நடிக்க தடை விதிக்கப்பட்டு, பின்னர் அதில் இருந்து விடுபட்டு வந்தார். திவ்யா ஒருவரை காதலிப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஆனால் யார்? அவரது காதலன் என்பது ரகசியமாகவே இருந்த வந்த நிலையில், இப்போது அவரது காதலன் வெளிநாட்டை சேர்ந்த ரபேல் என்பது அம்பலமாகியுள்ளது.
சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஐ.பி.எல்., போட்டியை திவ்யாவும், அவரது காதலுனும் நேரில் ஒன்றாக பார்த்துள்ளனர். திவ்யாவின் காதலன் பெயர் ரபேலாம். தொழிலதிபரான ரபேல் ஒரு பார்ட்டியின் போது திவ்யாவை சந்தித்து இருக்கிறார். ஆரம்பத்தில் நட்பாக ஏற்பட்ட பழக்கம் இப்போது காதலில் போய் முடிந்திருக்கிறது. இவர்களது காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் இப்போது திருமணத்தில் நாட்டமில்லை என்று இருவரும் கூறி வருகின்றனர். காரணம் திவ்யா சினிமாவிலும், ரபேல் தன்னுடைய தொழிலும் இன்னும் நிறைய சாதிக்க வேண்டுமாம்.

எடை குறைக்கும் அ‌‌ஜீத்

அப் இன் தி ஏர் படத்தில் வரும் ஜார்‌ஜ் குளூனியின் தோற்றத்தில் மங்காத்தா அ‌‌ஜீத்தைப் பார்ப்பதே அமர்க்களமாக உள்ளது. குளோஸ் கட் ஹேர் ஸ்டைலில் நரை முடிகள்… அ‌‌ஜீத்துக்கு துணிச்சல் ஜாஸ்தி.
மங்காத்தா ஏறக்குறைய முடிந்த நிலையில் பில்லா இரண்டாம் பாகத்துக்காக தயாராகி வருகிறார் தல. பில்லா இரண்டாம் பாகத்தில் பில்லாவின் இளமைப் பருவத்தை சொல்லவிருக்கிறார்கள். அதாவது சாதாரண ஒரு இளைஞன் எப்படி பில்லாவானான் என்ற கதையை.
கதைப்படி பில்லா முதல் பாகத்தில் வரும் அ‌‌ஜீத்தைவிட ஸ்லிம்மாக, இளமையாக பில்லா இரண்டாம் பாக அ‌‌ஜீத் தெ‌ரிய வேண்டும். இதற்காக இப்போதே உடற்பயிற்சியில் தீவிரமாகியுள்ளார் அ‌‌ஜீத். கணிசமான அளவு உடல் எடையை குறைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
உன்னைப்போல் ஒருவன் சக்‌ரி பில்லா இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

வேலைக்காரி மூலம் குழந்தை: அர்னால்ட் மனைவியைப் பிரிந்ததன் ரகசியம் அம்பலம

பிரபல நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஷ்நேகர் தனது வீட்டு வேலைக்காரி மூலம் குழந்தை பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால்தான் அவர் மனைவி மரியா ஷ்ரிவர் அவரை விட்டுப் பிரிந்து சென்றார்.
பிரபல ஆலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஷ்நேகர். இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாண கவர்னராக இருந்தார். தற்போது பதவி விலகிய அவர் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார். இவருக்கு மரியா ஷ்ரிவர் என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் அர்னால்டை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி மரியா ஷ்ரிவர் திடீரென அறிவித்தார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்புடன் வாழ்ந்த இத்தம்பதி பிரிய காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு முக்கிய காரணம் அர்னால்டு தனது வீட்டு வேலைக்காரி மூலம் ரகசியமாக குழந்தை பெற்று இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இவரது வீட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் அர்னால்டுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் கர்ப்பிணியான அப்பெண் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்போது அந்த குழந்தைக்கு 10 வயது ஆகிறது.
ஆனால் அந்த பெண் தற்போது அவரது வீட்டில் வேலை பார்க்கவில்லை. ஓய்வு பெற்றுச் சென்று விட்டார். இருந்தாலும் அக்குழந்தையின் பராமரிப்பு செலவு முழுவதையும் அர்னால்டு ஏற்றுள்ளார்.
இந்த விவரம் சில மாதங்களுக்கு முன்புதான் அவரது மனைவி மரியா ஷ்ரிவருக்கு தெரியவந்தது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தனது கணவர் அர்னால்டை விட்டுப் பிரிவதாக அறிவித்தார்.
இதை அர்னால்டும் ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கு வேலைக்காரி மூலம் பிறந்த 10 வயது குழந்தை இருப்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கவர்னர் பதவியை விட்டு விலகியதும் அந்த விவகாரம் பற்றி என் மனைவியிடம் தெரிவித்தேன். இதனால் எனது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் என் மீது கோபமும், வெறுப்பும், ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். இதற்கு எனக்கு மன்னிப்பு கிடையாது.
எனது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக அனைவரிடமும் உண்மையுடன் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்”, என்றார்.
அர்னால்டு மனைவி மரியா ஷ்ரிவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஒரு தாய் என்ற முறையில் எனக்கு குழந்தைகள் நலன்தான் முக்கியம். அவர்களுக்கு மதிப்பு, மரியாதை கிடைக்க வேண்டும். எங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை உருவாக்க முயற்சி செய்கிறேன். வேறு எதுவும் கூறுவதற்கு இல்லை,” என்றார்.

ஒரே நேரத்தில் தனுஷ் – சிம்புவுடன் ஜோடி போடும் ரிச்சா!!



ஹன்ஸிகா மோத்வானிக்குப் பிறகு, கிட்டத்தட்ட அதே பரபரப்புடன் பேசப்படுபவர் என்றால் அவர் ரிச்சாவாகத்தான் இருக்கும்.
கவர்ச்சியில் தாராளம் காட்டுவதில் இப்போதுள்ள தமிழ் சினிமா நாயகிகளுக்கு பீதியை ஏற்படுத்தி வருகிறாராம் அம்மணி.
இவரது தாராளம் பார்த்துதான் உடனடியாக ஆன்ட்ரியாவுக்கு பதில் இரண்டாம் உலகத்தில் பிடித்துப் போட்டார் செல்வராகவன். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார் ரிச்சா.
அடுத்த சில தினங்களில், மும்பை நாயகிகளைத் தேடி அலுத்துப் போன சிம்புவிடமிருந்து போன். ஒஸ்தியில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என அவர் சொல்ல, மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம் ரிச்சா.
“வெற்றிப் படத்தில் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. இதற்காக எதையும் செய்யலாம். நடிகையானதன் நோக்கமே வெற்றி பெறுவதுதானே”, என்கிறார் ரிச்சா
பிழைக்கத் தெரிந்தவர்!

சிம்புவை சந்திக்க மறுத்த சல்மான் கான்!

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான், தனது பிளாக்பஸ்டர் படமான தபாங்கை ரீமேக் செய்யும் சிம்புவை சந்திக்க மறுத்துவிட்டார்.
சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற படத்தை எடுத்து வருகிறார் தரணி. இது இந்தியில் சல்மான் கான் நடித்து அபார வெற்றி பெற்ற தபராங் படத்தின் ரீமேக் என்பதால், சல்மான் கானை நேரில் சந்தித்து சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளளாம் என யோசித்தார் சிம்பு.
படத்தின் துவக்க விழாவுக்கும் சல்மானை அழைத்திருந்தார் சிம்பு.
ஆனால் துவக்க விழாவுக்கும் வரவில்லை, சிம்புவை சந்திக்கவும் நேரம் தரவில்லையாம் சல்மான். எப்போதும் நான் ரொம்ப பிஸி என்று சொல்லி சிம்புவின் சந்திப்பை தவிர்த்து வருகிறாராம் சல்மான்.
சிம்புவைப் பற்றி யாரோ வேண்டுமென்றே சல்மானிடம் தவறாக சொல்லியிருக்கின்றனர். அதனால்தான் அவர் சந்திக்க மறுக்கிறார் என சிம்பு தரப்பில் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

வானம் – திரை விமர்சனம்



பிறர் நலனுக்காக வாழச் சொல்லும் அழுத்தமான கதை. ஐந்து பிரச்சினைகளை வெவ்வேறு கதை களத்தில் நகர்த்தி கிளைமாக்சில் ஒரே புள்ளியில் இணைத்து இதயங்களை கனக்க வைக்கிறார் இயக்குனர் கிரிஷ்…
கேபிள் டி.வி. நடத்தும் சிம்பு பணக்கார வாழ்வுக்கு கனவு காண்கிறார். கோடீஸ்வர பெண்ணை ஏழை என்பதை மறைத்து காதலிக்கிறார். அவளுக்காக புத்தாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க நாற்பதாயிரம் ரூபாயை திருட துணிகிறார்.
நன்றாக படிக்கும் சரண்யா மகனை கந்து வட்டிக்காரன் இழுத்து போகிறான். கிட்னியை விற்று அவனை மீட்க சரண்யா பட்டணத்து ஆஸ்பத்திரிக்கு வருகிறார்.
ராப் இசை போட்டியில் பங்கேற்க பெங்களூரில் இருந்து சென்னை வரும் பரத்-வேகா ஜோடி விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு அதே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகின்றனர்.
விபசார தொழில் செய்யும் அனுஷ்காவும் கத்தியால் குத்துப்பட்ட தோழியை காப்பாற்ற அங்கு அழைத்து வருகிறார். அதே ஆஸ்பத்திரியில் கிட்னி விற்ற பணத்தை வைத்துக்கொண்டு சிகிச்சை பெறும் சரண்யாவிடம் தொகையை சிம்பு திருடிக் கொண்டு ஓடுகிறார்.
இன்னொருபுறம் நேர்மையான பிரகாஷ்ராஜை தீவிரவாதி என போலீஸ் பிடித்து ஆஸ்பத்திரியில் வைக்கிறது. அந்த ஆஸ்பத்திரியை தகர்க்க தீவிரவாதிகள் வெடிகுண்டு துப்பாக்கிகளுடன் ஊடுருவுகின்றனர்.
அதன்பிறகு நடப்பவை இதயங்களை உலுக்கிபோடும் கிளைமாக்ஸ்…
சிம்பு ஹீரோயிசத்தை மூட்டை கட்டி விட்டு யதார்த்தத்தில் மனதை கெட்டியாக பிடிக்கிறார். காதலிக்காக பணம் திருட போய் போலீசில் மாட்டி படும் அவஸ்தைகள் ரகளை.
ஏழைப் பெண்ணிடம் பணத்தை பிடுங்குவது உதறல். பிறகு மனம் திருந்தி அப்பணத்தை ஆஸ்பத்திரி வார்டு அறையின் முன் போட்டு விட்டு மறைந்து நின்று பார்க்கும்போது விழிகளில் நீர்முட்ட வைக்கிறார்.
சுயநலவாதியாக வரும் பரத் உதாசீனம் செய்த டிரைவரால் தான் காப்பாற்றப்படுவதில் மனம் மாறுவது அழுத்தம். மகன் படிப்புக்காக கிட்னி விற்கும் சரண்யாவும் அவருடன் வரும் கிழவரும் ஜீவன் பாய்ச்சுகின்றனர்.
விலை மாதுவாக அனுஷ்கா கவர்ச்சி படையலிடுகிறார்.பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால் கேரக்டர்களும் கச்சிதம். சந்தானம் வி.டி.வி. கணேஷ் சிரிக்க வைக்கின்றனர். ஆரம்ப சீன்கள் வலுவின்றி நகர்கின்றன. பாதிக்குப் பின் விறுவிறுப்புக்கு மாறுகிறது.
ஆஸ்பத்திரியில் நோயாளிகளை காப்பாற்ற சிம்பு, பரத் போராடுவது பதை பதைக்க வைக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசை, ஞானசேகர், நீரவ்ஷா ஒளிப்பதிவு பக்கபலம்.

Tuesday, May 10, 2011

என் வாழ்க்கையும் ஒபாமா வாழ்க்கையும் ஒன்று: மல்லிகா ஷெராவத்!


பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி மல்லிகா ஷெராவத், ஹாலிவுட் நடிகர் ஜாக்கி ஜானுடன் “மித்” படத்தில் நடித்தது மூலம் பிரபலமானார். இப்போது முழுநேர ஹாலிவுட் நடிகையாக மாறி வரும் அவர், சமீபத்திய சிலகாலமாக அமெரிக்காவிலேயே தங்கியிருந்தார். அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார்.
பல நாட்களுக்கு பிறகு இந்தியா வந்து இறங்கியிருக்கும் மல்லிகா, ஒபாமாவுடனான நெகிழ்ச்சியான சந்திப்பு கூறியதாவது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்த போது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். என்னுடைய படங்கள் பற்றி நிறைய கேட்டறிந்தார். பிறகு என்னுடைய லவ் படத்தின் பிரீமியர் ஷோவிற்கு அழைத்தேன். அவரும் வருவதாக கூறினார். என்னுடைய வாழ்க்கையும், அதிபர் ஒபாமாவின் வாழ்க்கையை போன்றது தான்.
இந்தியாவிலேயே அதிபர் ஒபாமாவை சந்தித்த ஒரே நடிகை நான் தான். இது எனக்கு கிடைத்த பெருமை. பலர் என்னிடம் நான் சுயசரிதை எழுதப்போவதாக கேட்கின்றனர். சுயசரிதை எழுதும் அளவுக்கு இன்னும் நான் வளரச்சி அடையவில்லை.
சினிமாவில் இன்னும் நிறைய சாதித்த பின்னர் நிச்சயம் சுயசரிதை எழுதுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

விக்ரம் நடிக்கும் வேந்தன்!

தெய்வமகன், பிதா, தெய்வத்திருமகன் என்று மூன்று கட்ட தலைப்புக்கு பின்னர் இறுதியாக “தெய்வத்திருமகள்” என்று விக்ரம் படத்திற்கு பெயரிட்டுள்ளனர். விஜய் டைரக்ட் செய்திருக்கும் இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் “தெய்வத்திருமகள்” படத்தை தொடர்ந்து, “சீயான்” விக்ரம் அடுத்து டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக தீக்ஷா செத், காவலன் மித்ரா, நாடோடிகள் அபிநயா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். முழுக்க ஆக்ஷன் கலந்த அதிரடியுடன் கமர்சியல் படமாக இப்படம் எடுக்கப்பட இருக்கிறது.
படத்திற்கு “வேந்தன்” என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் துவங்கப்பட இருக்கிறது.

Sunday, May 8, 2011

தபாங் ரீ-மேக்கில் சிம்புவுக்கு ஜோடி கிடைச்சாச்சு!

இந்தியில் சல்மான் கான் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற “தபாங்” படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இப்படத்தை தில், தூள், கில்லி போன்ற ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் தரணி இயக்குகிறார்.
“குருவி” படத்திற்கு பின் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தரணி இப்படத்தை இயக்குகிறார். படத்தின் ஹீரோவாக நமது சிம்பு என்ற எஸ்.டி.ஆர்., நடிக்கிறார். படத்தில் சிம்புவுக்கு நாயகியாக பாலிவுட் நடிகை ஒருவர் நடிப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில், இறுதியாக தெலுங்கு நடிகை ரிச்சா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தமன் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை 9ம் தேதி திங்கள் அன்று துவங்குகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தி தபாங் படத்தின் தயாரிப்பாளரும், சல்மான்கானின் சகோதராருமான அர்பாஸ் கான் பங்கேற்கிறார்.

இசைஞானி எதிர்பார்க்கும் இரண்டு

இசைஞானி இளையராஜா சமீபமாக தான், இசையமைத்துள்ள எண்ணற்ற படங்களில் இரண்டு படங்களின் வெளியீட்டை பெரிதாக எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதில் ஒரு படம் சுசீந்திரன் இயக்கியுள்ள “அழகர்சாமியின் குதிரை” மற்றொருபடம் ரத்னகுமார் இயக்கியுள்ள “செங்காத்து பூமியிலே”.
இந்த இரண்டு படங்களின் ரீ-ரெக்கார்டிங்கிலும் காட்சிகளைப் பார்த்து கண்கலங்கியதாக சொல்லும் இசைஞானி, சில மாத இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு பட இசை வெளியீட்டிலும் கலந்து கொண்டு நெஞ்சுருக பேசியது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இளையராஜா தான் இசையமைத்த படங்கள் என்றாலும் அதன் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

கனி‌மொழிக்கு நெருக்கடி! குஷ்பு பரபரப்பு கருத்து!!

ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன், என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி.
இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார்.
ஒரு பெண்ணாக இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன், என்று கூறியுள்ளார்.

மேக்-அப் இல்லாமல் நடிக்க அமோகா ஆசை!

நான் மேக்கப் போடாமலேயே அழகாக இருப்பேன்; அதனால் மேக்-அப் இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்று நடிகை அமோகா அலைஸ் பிரியங்கா கோத்தாரி கூறியுள்ளார்.
ஜே ஜே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அமோகா. அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் போன இவர், நீண்‌ட இடைவெளிக்கு பிறகு கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் மேக்-அப் இல்லாமலேயே அழகாக இருப்பதாக சில டைரக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதை நான் அப்படியே நம்புகிறேன். இருந்தாலும் குறைந்த அளவு மேக்-அப்புடன் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
இந்த விஷயத்தில் மடோனாவை பின்பற்ற நினைக்கிறேன். தன் வயதுக்கேற்ற வகையில் அவர் எப்போதும் அழகான மேக்-அப்புடன் இருப்பார். அது எனக்கு பிடிக்கும். மேக்-அப் இல்லாமல் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக என் மனதில் குடிகொண்டிருக்கிறது, என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள்தான் எல்லாமே…! நடிகர் ஜீவா நெகிழ்ச்சி!!


ரசிகர்கள்தான் எங்களுக்கு எல்லாமே… எங்களை வாழ வைப்பதே ரசிகர்கள்தான் என்று நடிகர் ஜீவா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தஞ்சாவூரில் கோ படம் திரையிடப்பட்டிருக்கும் தியேட்டருக்கு படத்தின் நாயகன் நடிகர் ஜீவா திடீர் விசிட் அடித்தார்.
அப்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்துடன் பேசிய ஜீவா, சென்னை, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களுக்கு சென்றால் அந்த மாவட்டத்திற்கு என்று தனி பாஷை இருக்கும். ஆனால் தஞ்சை மாவட்டத்திற்கு என்று தனி பாஷை எதுவும் கிடையாது. சுத்தமான தமிழ் பேசும் ஊர் தஞ்சாவூர் தான். தஞ்சையில் இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தற்போது புதிய படங்கள் திரைக்கு வந்தால் 2 வாரத்திற்கு பின்பு தியேட்டருக்கு கூட்டம் வருவதில்லை. ஆனால் கோ படம் திரையிட்டு 16 நாட்கள் ஆகியும் இவ்வளவு கூட்டம் வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காமல் தியேட்டருக்கு நேரில் வந்து பார்த்து இருக்கிறீர்கள். நல்ல படம் எடுத்தால் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன். ஒரு திரைப்படம் எடுக்கிறோம் என்றால் 200 குடும்பங்கள் அதனால் வாழ்கின்றனர். அவர்களை எல்லாம் நீங்கள்தான் வாழ வைக்கிறீர்கள். நீங்க இல்லைன்னா நாங்க இல்லை, எங்களுக்கு எல்லாமே நீங்கள்தான், என்றார்.
நடிகர் ஜீவாவுடன் நடிகர்கள் அஜ்மல், ஜெகன் உள்ளிட்டோரும் தியேட்டருக்கு வந்திருந்தனர்.

டிஆர் ஆவேசம்

சிம்பு நடிப்பில் வெளிவந்திருக்கும் வானம் படத்தில் காவி கட்சிகளை விமர்சனம் செய்யும் காட்சிகள் இருப்பதாகக் கூறி பாஜகவினர் வானம் படத்தின் கட் அவுட்களை அகற்றியதோடு செருப்பு மாலையும் அணிவித்தனர்.
இதனால் பொங்கியெழுந்த சிம்பு ரசிகர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு சிம்புவிடம் மன்னிப்பு கேள் என்று கோஷங்கள் எழுப்பினர். பிறகு அவர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த‌த் தகவல் அறிந்ததும் காவல் நிலையத்துக்கு சென்ற டிஆர், தனது சொந்த பொறுப்பில் அவர்களை வெளியெ கொண்டு வந்தார். அத்துடன், நாட்டில் நடப்பதைதான் படத்தில் சொல்லியிருக்கிறார்கள், அரசியல் வேறு சினிமா வேறு இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள் என கேட்டுக் கொண்டவர், சிம்புவை வீணாக சீண்டாதீர்கள் என எச்ச‌ரிக்கையும் விடுத்தார்.
இந்த சம்பவத்தால் தமிழக பாஜகவுக்கு செம பப்ளிசிட்டி.

மாதவனின் நம்பிக்கை


எவனோ ஒருவன், யாவரும் நலம் போன்ற படங்களுக்குப் பிறகும் தமிழ் சினிமாவில் விருந்தினரைப் போலதான் மதிக்கப்படுகிறார் மாதவன். எப்போது இவர் தமிழகத்தின் எங்க வீட்டுப் பிள்ளையாவது?
மாதவன் தமிழில் நடித்து வரும் ஒரே படம், வேட்டை. லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா இணைந்து நடிக்கும் படமிது. சமீரா ரெட்டி, அமலா பால் என இரு ஹீரோயின்கள்.
படத்தின் ஸ்கி‌ரிப்ட், கேரக்டர்கள் பக்காவாக இருப்பதாகவும், இந்தப் படம் தனக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுக்கும் என்றும் நம்பிக்கை தெ‌ரிவித்துள்ளார் மாதவன். லிங்குசாமியின் ரன் படம் மாதவனின் சாக்லெட் பாய் இமேஜை மாற்றியது நினைவிருக்கலாம்.