Thursday, June 16, 2011

அனுஷ்கா – நாக சைதன்யா நிச்சயதார்த்தம்… அதிர்ச்சியில் கோடம்பாக்கம்!!

நம்புவதா வேண்டாமா என குழப்பத்திலும் பரபரப்பிலும் திணறிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். காரணம்… தென்னிந்தியாவை தனது இடுப்பு மடிப்பில் சுருட்டி வைத்திருக்கும் கவர்ச்சி நாயகி அனுஷ்கா ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்ற செய்’தீ’தான்!
இவரைக் கல்யாணம் முடிக்கவிருப்பவர் அக்கட பூமியின் காதல் மன்னனான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை!!
நாக சைதன்யா, நாகார்ஜூனா மற்றும் அவரது முதல் மனைவி லட்சுமி ஆகியோருக்குப் பிறந்தவராவார். அமலா, நாகார்ஜூனாவின் 2வது மனைவி.
காதும் காதும் வைத்தமாதிரி, ஆனால் நாகார்ஜூன் – அமலா முன்னிலையில் நடந்துள்ளது இந்தத் நிச்சயதார்த்தம்.
மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த செய்தியை கோலிவுட்டின் பிரபல இளம் ஹீரோதான் டமாரம் அடித்து பறைசாற்றி வருகிறாராம். இவர் அம்மணியுடன் சமீபத்தில் ஆட்டம் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை அமலா, ரஜினியுடன் தொடர்ந்து நடித்து டாப் கியரில் போய்க் கொண்டிருந்த போதுதான், திடுதிப்பென்று நாகார்ஜூனாவை திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.
தற்போது தனது தந்தை பாணியில் முன்னணி நடிகை ஒருவரை கரம் பிடிக்கிறார் நாக சைதன்யா
திருமணத்தையாவது வெளியில் சொல்வார்களா?

No comments:

Post a Comment